செய்தி

திருகோணமலையில் யானை தந்தங்களை வைத்திருந்தவர் கைது

திருகோணமலை நிலாவெளி வள்ளுவர் வீதியில் வீடு ஒன்றில் யானை தந்தங்களை வைத்திருந்த நபரொருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர்.

திருகோணமலை நிலாவெளி வள்ளுவர் வீதியில் வீடு ஒன்றில் யானை தந்தங்களை வைத்திருந்த நபரொருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர்.

திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின்படி சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது யானை தந்தம் மீட்கப்பட்டுள்ளது.

விசேட பொலிஸ் அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி எம்.எம்.என்.டி. திலகரத்ன மற்றும் எச்.எம்.டி. மாலித் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குறித்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யானை தந்தத்துடன் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி