இலங்கை

உள்ளுராட்சி ஆணையாளராக றாபியை நியமித்த கிழக்கு ஆளுநர்!!

  • June 15, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான ஏ.ரி.எம். றாபியை கிழக்கு மாகாண ஆளுநர் நியமித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று  (15) இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 ஜனவரி 01 முதல் கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையில் அவருக்கு இப்பதவி உயர்வு கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் அக்கரைப்பற்று மாநகர சபையின் […]

உலகம் செய்தி

போர் விமானங்கள், கப்பல்களை களமிறக்கும் பிரான்ஸ்!

  • June 15, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை கடல் வழித்தடத்தை மீண்டும் திறப்பதற்கான கூட்டு ராணுவ நடவடிக்கை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தொடங்கப்படலாம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron அறிவித்துள்ளார். பிரான்சில் இன்று நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த இந்த தகவலை வெளியிட்டார். ஹார்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை மீண்டும் நிலைநிறுத்த பிரிட்டனும் பிரான்சும் மிக விரைவாகச் செயல்படத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் […]

உலகம் செய்தி

சுரேஷ் சலே விசாரணைக்கு அஞ்சுவது ஏன்?

  • June 15, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “சுரேஷ் சலே புலனாய்வு அதிகாரியாக, அரச அதிகாரியாக இருந்தவர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனக்கு தெரிந்தவற்றை கூறி, விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும். மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் அவருக்கு தொடர்பில்லையெனில், விசாரணைக்கு ஒத்துழைப்பதே சிறந்தது. குற்றவாளியெனில்தான் […]

இலங்கை

தங்கத்தின் விலை 4,325 அமெரிக்க டொலராக உயர்வு!! இலங்கையிலும் அதிகரிப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை 4,325 அமெரிக்க டொலராக உயர்ந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் தங்கத்தின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று (15) காலை 9.00 மணிக்கு பதிவான விலைகளுடன் ஒப்பிடுகையில், உள்ளூர் தங்கத்தின் விலை  6,000 ரூபாயால் உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, இன்று காலை கொழும்பு கடல் வீதி தங்கச் சந்தையில் 22 காரட் பவுண் ஒன்றின்  விலை  360,600 ரூபாயாக  பதிவாகியுள்ளது. இதற்கிடையில், 24 காரட் பவுண் ஒன்றின் விலை,  392,000 ஆக உயர்ந்துள்ளதாக […]

இலங்கை

2.5 மில்லியன் டொலர் மாயமான விவகாரத்தில் மத்திய வங்கிக்கும் பங்கு?

  • June 15, 2026
  • 0 Comments

திறைசேரியில் இருந்து மாயமான 2.5 மில்லியன் டொலர் நிதி தொடர்பில் விசாரணை செய்ய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி, நிதிச் சட்டத்தின் மூலம் சுயாதீனமாக்கப்பட்ட பின்னர், எந்தவொரு தரப்பிற்கும் பொறுப்புக்கூறாத மற்றும் கட்டுப்படாத ஒரு நிறுவனமாகத் தன்னைத்தானே வரைவிலக்கணப்படுத்திக் கொண்டுள்ளதே இங்கு காணப்படும் பிரதான பிரச்சினையாகும் எனவும் அந்த […]

ஐரோப்பா செய்தி

ஹார்முஸ் நீரிணைபாதுகாப்பு: பிரிட்டன், பிரான்ஸ் கைகோர்ப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள அமைதி உடன்பாட்டை பிரிட்டன் பிரதமர் Keir Starmer வரவேற்றுள்ளார். இது மிகவும் குறிப்பிடத்தக்க திருப்புமுனை எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து கடந்த சனிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தான் விரிவாக பேச்சு நடத்தியதாகவும் Keir Starmer குறிப்பிட்டுள்ளார். G7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் Keir Starmer ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் கூறியவை வருமாறு , “இந்த உடன்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த சில வாரங்களாக […]

ஐரோப்பா

பிரான்ஸுக்கு இறுதி எச்சரிக்கை!!

  • June 15, 2026
  • 0 Comments

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பிரான்ஸ் அரசாங்கம்  03 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில் அந்த வரியை நீக்காவிட்டால் அந்நாட்டில் தயாரிக்கப்படும் ஒயின் மீது 100 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க சந்தையில் பிரெஞ்சுப் பொருட்கள் மீது கணிசமான வரிகள் விதிக்கப்படுவதைத் தவிர்க்க, இந்த வரியை உடனடியாக நீக்குமாறு மக்ரோனை நேரடியாக வலியுறுத்திய ட்ரம்ப்,  இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். “இந்த வரி தொடர்ந்தால், பிரான்சிலிருந்து வரும் அனைத்து ஷாம்பெயின்கள் […]

இலங்கை செய்தி

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி யாழில் போராட்டம்!

  • June 15, 2026
  • 0 Comments

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலையப் பகுதியில் இருந்து தமிழ் மக்கள் இராணுவ நடவடிக்கை காரணமாகக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இன்று திங்கட்கிழமையுடன் 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்நிலையில், தங்களை உடனடியாகச் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வலியுறுத்தி யாழ். மாவட்ட செயலகம் முன்பாகவும், பலாலி சந்திக்கு அருகிலும் இன்று காலை கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவு மக்கள் இராணுவ நடவடிக்கையினால் தங்களின் […]

உலகம் செய்தி

படைகளை மீளப்பெற இஸ்ரேல் மறுப்பு: மீண்டும் பரபரப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

லெபனான் எல்லைப் பகுதிகளில் இருந்து தங்கள் ராணுவத்தை விலக்கிக்கொள்ளும் எண்ணம் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Israel Katz திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். போர்நிறுத்த உடன்படிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக லெபனான், சிரியா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் படைகளை தொடர்ந்து தக்க வைக்க இஸ்ரேல் தீர்மானித்துள்ளது. இஸ்ரேலிய எல்லைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அண்டை நாடுகளில் உள்ள தீவிரவாதக் கட்டமைப்புகளை முழுமையாக அழிப்பதே தங்களின் முதன்மை இலக்கு என அவர் விளக்கியுள்ளார். மேலும், இந்த […]

ஐரோப்பா

நோர்வே பட்டத்து இளவரசியின் மூத்த மகனுக்கு சிறை தண்டனை!

  • June 15, 2026
  • 0 Comments

நோர்வேயின் பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட்டினின் மூத்த மகனான மரியஸ் போர்க் ஹோய்பி  (Marius Borg Høiby) எதிர்கொண்டுள்ள கற்பழிவு வழக்கில் 04 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் இரண்டு பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள், ஒரு குடும்ப வன்முறைக் குற்றம் மற்றும் பிற குற்றங்களில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய  ஓஸ்லோ மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் மற்றொரு பாலியல் வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டுக்களை ஹோய்பி மறுத்துள்ள […]