உலகம் செய்தி

அமைதி திரும்பினாலும் ஹார்முஸ் நீரிணையால் ஆபத்து!

  • June 15, 2026
  • 0 Comments

அமெரிக்கா, ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை கையெழுத்தானதும், கடலில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக ஹார்முஸ் நீரிணை திறக்கப்படவுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் மிக பரபரப்பான இந்த எண்ணெய் போக்குவரத்துப் பாதையை ஈரான் முழுமையாக முடக்கியிருந்தது. அத்துடன், கண்ணி வெடிகளும் வீசப்பட்டன. இவ்வாறு ஹார்முஸ் நீரிணையில் வீசப்பட்டுள்ள கண்ணிவெடிகளை முழுமையாகக் கண்டறிந்து அகற்றுவதற்கு சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகலாம் என்று அமெரிக்க கடற்படையின் ஓய்வுபெற்ற […]

உலகம்

முடிவுக்கு வந்த போர் : சர்வதேச நிதிச் சந்தைகளில் உச்சம் தொட்ட பங்குகள்!

  • June 15, 2026
  • 0 Comments

மத்தியக் கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து  சர்வதேச நிதிச் சந்தைகள் இன்ற ஏற்றம் கண்டுள்ளன. ஸ்பானிய பங்குச் சந்தை இன்றைய முக்கிய பங்குகளில் ஒன்றாகத் தொடங்கியது. ஐபெக்ஸ் (Ibex) 35 குறியீடு அனைத்து எதிர்ப்பு நிலைகளையும் தகர்த்து, 19,000 புள்ளிகளைக் கடந்து 19,122 புள்ளிகளை எட்டி, ஒரு புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டது. இந்த சமீபத்திய எழுச்சியுடன், இந்த ப்ளூ-சிப் ( blue-chip) குறியீடு ஆண்டின் தொடக்கத்திலிருந்து சுமார் 10% உயர்வை […]

உலகம்

ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்!!! வொஷிங்டனில் அரசியல் கொந்தளிப்பு

  • June 15, 2026
  • 0 Comments

போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேஅமைதி ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, வொஷிங்டனில் அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது . ஜனநாயகக் கட்சியினர் ஒப்பந்தத்தின் விவரங்களையும், போர் தொடர்பான ஆதாயங்கள் மற்றும் இழப்புகளையும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் அவரது ஆதரவாளர்களும் இந்த முன்னேற்றத்தை ஒரு பெரும் இராஜதந்திர வெற்றி எனக் கூறுகின்றனர். எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பெற […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை! உறுதிப்படுத்தினார் ஸ்டாமர்!

  • June 15, 2026
  • 0 Comments

16 வயதுக்குட்பட்டவர்கள் அனைத்து முக்கிய சமூக ஊடக செயலிகளிலிருந்தும் தடை செய்யப்படுவார்கள் என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். டவுனிங் வீதியில் சற்று முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “இன்று நம் நாட்டிற்கு ஒரு முக்கியமான தருணம். இது ஒரு பெரிய முன்னேற்றம், நம் குழந்தைகளுக்கும் நம் எதிர்காலத்திற்கும் ஒரு உண்மையான மாற்றமாகும். ஏனென்றால், 16 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடை விதிக்கும் என்பதை இன்று என்னால் […]

உலகம்

ஈரானுடனான போர் முடிவுக்கு வருகின்றது, ஒப்பந்தமும் எட்டப்படது!! டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

ஈரானுடனான ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி, ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தனது அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உலகெங்கிலும் உள்ள கப்பல்கள் தங்களது செயல்பாடுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் தொடங்குவதற்கான நேரம் இது என்றும் கூறியுள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் வெள்ளிக்கிழமை முதல் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்றும், கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டொனால்ட் டிரம்ப் […]

இலங்கை செய்தி

கேபியிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் குறித்து தீவிர விசாரணை!

  • June 15, 2026
  • 0 Comments

புலிகள் அமைப்பின் சர்வதேச வலைப்பின்னலின் முன்னாள் தலைவரான கேபி எனப்படும் குமரன் பத்மநாதனிடமிருந்து பாதுகாப்புப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டதன், பின்னர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் பெருந்தொகை தங்கம் தொடர்பான விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய முக்கிய பிரதானிகள் சிலர் விசாரணைக்கு வரவழைக்கப்படவுள்ளன. சிங்கள இணைய ஊடகமொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த வாக்குமூலங்களின் மூலம் வெளிப்படும் தகவல்களின் அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் […]

இலங்கை செய்தி

காணி விடுவிப்பு: வடக்கு ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று (15.06.2026) ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தனர். 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்த தமது மக்கள், 36 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் இன்னும் அகதிகளாகவே வாழ்ந்து வருவதாகத் தமது மனுவில் மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக […]

ஐரோப்பா செய்தி

எரிசக்தி நெருக்கடி தீரும்: EU நம்பிக்கை!

  • June 15, 2026
  • 0 Comments

  அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான அமைதி ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது. இந்த உடன்படிக்கை ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்த ஆழமான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுப்பதோடு, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தணிக்க உதவும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் Kaja Kallas குறிப்பிட்டுள்ளார். ஹார்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது உலகப் பொருளாதாரத்திற்கும் பிராந்திய நிலைத்தன்மைக்கும் மிக அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஈரானின் ஏவுகணை திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க […]

செய்தி விளையாட்டு

T -20 தொடரை கைப்பற்றி பதிலடி கொடுத்தது மே.தீவுகள்!

  • June 15, 2026
  • 0 Comments

இலங்கை அணிக்கு எதிரான தீர்மானமிக்க மூன்றாவது மற்றும் இறுதி T – 20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 169 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 170 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியைத் தன்வசப்படுத்தியது. ஷமார் ஜோசப் […]

இலங்கை செய்தி

இலங்கையின் பொருளாதாரம் ஆபத்தில்!

  • June 15, 2026
  • 0 Comments

“இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது. வெகுவிரைவில் ஒரு முழுமையான வீழ்ச்சியைக் காண முடியும்.” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் எல்லாப் பக்கங்களிலும் சிக்கலில் உள்ளது. ஒருபுறம் பொருளாதார மந்தநிலையும், மறுபுறம் மனித உரிமை மீறல்களும் உள்ளன. முன்னாள் படையினர் ஒடுக்கப்படுவதை நம்மால் காண முடிகிறது, அதே நேரத்தில் […]