நோர்வே பட்டத்து இளவரசியின் மூத்த மகனுக்கு சிறை தண்டனை!
நோர்வேயின் பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட்டினின் மூத்த மகனான மரியஸ் போர்க் ஹோய்பி (Marius Borg Høiby) எதிர்கொண்டுள்ள கற்பழிவு வழக்கில் 04 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் இரண்டு பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள், ஒரு குடும்ப வன்முறைக் குற்றம் மற்றும் பிற குற்றங்களில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய ஓஸ்லோ மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் மற்றொரு பாலியல் வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டுக்களை ஹோய்பி மறுத்துள்ள நிலையில் மேன்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஹோய்பியின் போதைப்பொருள் பழக்கம் மற்றும் பாலியல் உறவுகளை விவரித்த இந்த ஏழு வார கால விசாரணை, நோர்வே அரச குடும்பத்தின் செல்வாக்கு சரிவதற்கு வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





