இலங்கை செய்தி

“இந்தியாவில்போல் இலங்கையிலும் இளைஞர் புரட்சி வெடிக்கக்கூடும்”

“இந்தியாவில் பலம்மிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராடியது போல, எதிர்காலத்தில் இலங்கையிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நடக்கக்கூடும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் பலம்மிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராடியது போல, எதிர்காலத்தில் இலங்கையிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நடக்கக்கூடும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

“அரசாங்கத்தின் ஏதேச்சாதிகாரப் போக்கிற்கு எதிராகவும், நீதித்துறைச் சுயாதீனம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவுமே எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. பொதுப் பிரச்சினைகளின் போது எங்களது இந்த இணைந்த பயணம் தொடருமே தவிர, தேர்தலில் ஒன்றாகப் போட்டியிடப் போவதில்லை.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையிடுகிறது. மக்கள் மத்தியில் தமக்கிருக்கும் செல்வாக்குச் சரிந்து வருவதன் காரணமாகவே அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்கிறது. இந்தப் பிரச்சினையை நாங்கள் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்வோம்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்திருப்பதைக் கண்டு அரசாங்கத்திற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சஜித் பிரேமதாசவும், ரணில் விக்ரமசிங்கவும் இணைந்தே தேர்தல்களை வழிநடத்துவார்கள். நாங்கள் அந்த முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டோம்.

இந்தியாவை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் சென்ற பலம்மிக்க தலைவரான பிரதமர் மோடிக்கு எதிராகவே அங்குள்ள இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். இலங்கையிலும் எதிர்காலத்தில் அத்தகைய சூழ்நிலை உருவாகக்கூடும்.

அத்துடன், 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எமது தரப்பில் சஜித் பிரேமதாசவே வேட்பாளராகக் களமிறங்குவார். அவர் நிச்சயம் வெற்றிபெறுவார்” என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை