ஐரோப்பா

போர்களத்தில் 30,000 வட கொரிய துருப்புக்களை நிலைநிறுத்த ரஷ்யா திட்டம்

போர்களத்தில் 30,000 வட கொரிய துருப்புக்களை நிலைநிறுத்த ரஷ்யா தயாராகி வருவதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.

ரஷ்யா கீவ் நகரை பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ள நிலையில் ஜெலன்ஸ்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ரஷ்யா 221,000 பேரைப் படையில் சேர்த்துள்ள போதிலும், 225,500 உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளதாகவும்  இதனால்  போர்க்களத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க இழப்புகளை ஈடுகட்ட படைதிரட்டல் அதிகரிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஷியாவில் விடுமுறை முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்ததோடு, உக்ரைன் வேண்டுமென்றே பொதுமக்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினர்.

மோதலை நிறுத்தி, பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கும் என உலக தலைவர்களை வலியுறுத்தி வருகின்ற நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகள் தென்படவே இல்லை என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்