உலகம்

அமெரிக்கத் தடைகளுக்கு சவால் செய்யும் ஈரானின் பொருளாதாரம்

  • September 1, 2026
  • 0 Comments

அமெரிக்கத் தடைகள் இருந்தபோதிலும் ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணிக் கையிருப்பு உள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் அப்தோல்நசர் ஹெம்மாட்டி Abdolnaser Hemmati தெரிவித்துள்ளார். பொருளாதாரப் போரில் தோல்வியடைந்து வருவதால் தெஹ்ரான் ஆக்ரோஷமாகச் செயல்படுவதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நான் அமெரிக்க அதிபரிடம் கூறுகிறேன்: ஈரானிடம் (அந்நியச் செலாவணி) உள்ளது. அது போதுமானதாகவும் இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அவற்றின் விவரங்களை வெளியிட முடியாது என்றும் அவர் மேலும் கூறினார். பொருளாதார […]

பிள்ளையானுக்கு மறியல் நீடிப்பு: லண்டனிலுள்ள சந்தேகநபருக்கு பிடியாணை இலங்கை செய்தி

பிள்ளையானுக்கு மறியல் நீடிப்பு: லண்டனிலுள்ள சந்தேகநபருக்கு பிடியாணை

  • September 1, 2026
  • 0 Comments

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகிய மூவரும் சிறைச்சாலைகளில் இருந்து இணையவழி காணொளி […]

ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ள கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்கு ரஷ்யா செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

அமெரிக்காவின் கூட்டு போர் பயிற்சிக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு

  • September 1, 2026
  • 0 Comments

ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ள கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்கு ரஷ்யா செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் பயிற்சியில் அமெரிக்காவின் ‘டைய்பூன்’ (Typhon) ஏவுகணை அமைப்புகளைப் பயன்படுத்துவது தனது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனத் தெரிவித்துள்ள ரஷ்யா, இது குறித்து டோக்கியோவிடம் அதிகாரப்பூர்வமாகப் அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானில் செப்டம்பர் 8 முதல் 24 வரை ‘ஓரியண்ட் ஷீல்ட்’ (Orient Shield) என்ற பெயரில் இந்த கூட்டு ராணுவப் பயிற்சி […]

ரஷ்​யா​விடம் இருந்து மேலும் ஐந்து எஸ்-400 ஏவுகணை​களை கொள்வனவு செய்ய இந்தியா திட்​ட​மிட்டு உள்​ளது. இந்தியா செய்தி

ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம்

  • September 1, 2026
  • 0 Comments

ரஷ்​யா​விடம் இருந்து மேலும் ஐந்து எஸ்-400 ஏவுகணை​களை கொள்வனவு செய்ய இந்தியா திட்​ட​மிட்டு உள்​ளது. ரஷ்யாவின் எஸ் – 400 ஏவு​கணை​கள் உலகின் வலிமை​யான, அதிநவீன ஏவு​கணை​யாக கருதப்​படு​கிறது. கடந்த 2018-ம் ஆண்டில் ரஷ்​யா​விடம் இருந்து ரூ.51,838 கோடியில் ​ (இந்திய நாணய மதிப்பு) ஐந்து எஸ் – 400 ஏவு​கணை​களை வாங்க இந்​தியா ஒப்​பந்​தம் செய்​தது. இதன்​படி மூன்று ஏவு​கணை​களை ரஷ்யா விநி​யோகம் செய்துள்ளது. மீத​முள்ள இரு ஏவு​கணை வரும் நவம்​பரில் இந்தியாவிடம் ஒப்​படைக்​கப்​படும் என்று […]

நேபாளத்துக்கு நிதி உதவி வழங்க அமைச்சரவை அனுமதி இலங்கை செய்தி

நேபாளத்துக்கு நிதி உதவி வழங்க அமைச்சரவை அனுமதி

  • September 1, 2026
  • 0 Comments

கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் நிவாரணப் பணிகளைச் செயற்படுத்துவதற்காக 1 மில்லியன் அமெரிக்க அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் இதற்குரிய யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு நேபாளத்தில் றசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான திடீர் வெள்ள நிலைமையால் அதிகமானவர்கள் உயிரிழந்து அதிகளவான சொத்துக்களும் அழிவடைந்துள்ளன. இவ் இடர் நிலைமையின் மோசமான தன்மையால் நேபாள அரசுக்கும் மற்றும் மக்களுக்கு குறிப்பிடத்தக்களவு மனிதாபிமான சுமை […]

ஈரான்மீது கடுமையான பொருளாதார நடவடிக்கை: பிரான்ஸ் எச்சரிக்கை ஐரோப்பா செய்தி

ஈரான்மீது கடுமையான பொருளாதார நடவடிக்கை: பிரான்ஸ் எச்சரிக்கை

  • September 1, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு பிரான்ஸ் விரும்புவதாக அந்நாட்டின் நிதியமைச்சர் ரோலண்ட் லெஸ்க்கூர் (Roland Lescure) தெரிவித்துள்ளார். Al Jazeera) செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஈரான் விவகாரத்தில் அமெரிக்க நிர்வாகத்துடனும் அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட்டுடனும் (Scott Bessent) இணைந்து அடுத்து என்ன நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து பிரான்ஸ் எனவும் அவர் கூறினார். பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியமும் பல ஆண்டுகளாக ஈரான் மீது கடுமையான […]

கருத்து & பகுப்பாய்வு

புதிய வைரஸுகளுக்கு ஏற்ப தன்னை தகவமைக்கும் திறன் – வௌவால்களிடம் ஆய்வு

  • September 1, 2026
  • 0 Comments

வௌவால்கள் அவற்றின் அளவிற்கு மிக நீண்ட காலம் வாழும் பாலூட்டிகளாகும், மேலும் அவை வைரஸ்களுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளவும், தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் திறன் பெற்றுள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய வைரஸ்களை எதிர்க்கும் மற்றும் புற்றுநோயைத் தடுக்கும் வௌவால்களின் திறன்  மனிதர்களுக்கு  உபயோகப்படுமா என்பது தொடர்பில் விஞ்ஞானிகள்  தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பான ஆய்வு கட்டுரை நேச்சர் இதழில் பிரசூரிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வின் முடிவுகள் வௌவால்களின் வயதாவதைத் தாமதப்படுத்தும் மற்றும் […]

நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1,000-ஐத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நேபாளம் வெள்ளம்: 1000 ஐ கடந்தது பலி எண்ணிக்கை

  • September 1, 2026
  • 0 Comments

நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1,000-ஐத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேபாளத்தில் மட்டும் 987 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 583 வெளிநாட்டவர்கள் உட்பட 3,916 பேரைக் காணவில்லை என்றும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. அதேவேளையில், சீனா வெளியிட்ட தகவலின்படி 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 261 வெளிநாட்டவர்கள் உட்பட 546 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள […]

போரை முடிவுக்கு கொண்டுவருமாறு புடினிடம் மோடி கோரிக்கை இந்தியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

போரை முடிவுக்கு கொண்டுவருமாறு புடினிடம் மோடி கோரிக்கை

  • September 1, 2026
  • 0 Comments

உக்ரைனில் நடைபெற்று வரும் போர் மனிதநேயத்தின் அடிப்படையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், போரை நிறுத்துவதற்கான அனைத்து அமைதி முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ (SCO) உச்சி மாநாட்டின் இடையே, ஜனாதிபதி புடினுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் பிரதமர் மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதற்காக மேலைநாடுகள் […]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும் நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்தியா உலகம் செய்தி

இந்திய பிரதமர், ஈரான் ஜனாதிபதி நேரடி சந்திப்பு

  • September 1, 2026
  • 0 Comments

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும் நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டுக்கு இணையாகவே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், இவ்விரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறையாகும். இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான சமீபத்திய உறவுகள் குறித்து ஆய்வு செய்த தலைவர்கள், கூட்டு ஒத்துழைப்பை மேலும் […]