இந்திய பிரதமர், ஈரான் ஜனாதிபதி நேரடி சந்திப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும் நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி
மாநாட்டுக்கு இணையாகவே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், இவ்விரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறையாகும்.
இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான சமீபத்திய உறவுகள் குறித்து ஆய்வு செய்த தலைவர்கள், கூட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்குத் தீர்வு காண்பதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




