இலங்கை செய்தி

நேபாளத்துக்கு நிதி உதவி வழங்க அமைச்சரவை அனுமதி

நேபாளத்துக்கு நிதி உதவி வழங்க அமைச்சரவை அனுமதி

கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் நிவாரணப் பணிகளைச் செயற்படுத்துவதற்காக 1 மில்லியன் அமெரிக்க அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் இதற்குரிய யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு நேபாளத்தில் றசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான திடீர் வெள்ள நிலைமையால் அதிகமானவர்கள் உயிரிழந்து அதிகளவான சொத்துக்களும் அழிவடைந்துள்ளன.

இவ் இடர் நிலைமையின் மோசமான தன்மையால் நேபாள அரசுக்கும் மற்றும் மக்களுக்கு குறிப்பிடத்தக்களவு மனிதாபிமான சுமை ஏற்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளல், தொடர்ந்தும் வெள்ளம் ஏற்படும் அபாயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பாரியளவு பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றமை போன்ற காரணங்களால் நிவாரணங்கள் மற்றும் மீள்கட்டமைப்பு ஆதரவுகளை துரிதமாக வழங்க வேண்டியுள்ளது.

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் காணப்படுகின்ற ஆழமான கலாச்சார, சமய மற்றும் பரஸ்பர வெகுசனத் தொடர்புகளின் அடிப்படையில் நீண்டகால நட்புகள் மற்றும் மோசமான இயற்கை அனர்த்தத்தால் இடம்பெற்ற மோசமான மனிதாபிமான மற்றும் பொருளாதாரப் பாதிப்புக்கள் தொடர்பாக இலங்கையின் அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசால் நேபாள அரசுக்கு மனிதாபிமான உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை