அமெரிக்கத் தடைகளுக்கு சவால் செய்யும் ஈரானின் பொருளாதாரம்
அமெரிக்கத் தடைகள் இருந்தபோதிலும் ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணிக் கையிருப்பு உள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் அப்தோல்நசர் ஹெம்மாட்டி Abdolnaser Hemmati தெரிவித்துள்ளார்.
பொருளாதாரப் போரில் தோல்வியடைந்து வருவதால் தெஹ்ரான் ஆக்ரோஷமாகச் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நான் அமெரிக்க அதிபரிடம் கூறுகிறேன்: ஈரானிடம் (அந்நியச் செலாவணி) உள்ளது. அது போதுமானதாகவும் இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவற்றின் விவரங்களை வெளியிட முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.
பொருளாதார நிலைமைகளும் வாழ்வாதார நிர்வாகமும் கடினமாகிவிட்டன என்பதை நான் மக்களிடம் முழு நேர்மையுடன் கூறுகிறேன்.
ஆனால் வீழ்ச்சி ஒருபோதும் ஏற்படவில்லை, ஏற்படவும் போவதில்லை. இந்தக் கூற்றுக்கள் வெறும் உளவியல் போர்தான், விரைவில் நிலைமை சீராகிவிடும்,” என்றும் ஹெம்மாட்டி தெரிவித்துள்ளார்.




