நியூசிலாந்தில் நாய் பந்தயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 150 பந்தய நாய்கள் சிறப்பு விமானங்கள் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

நியூசிலாந்தில் நாய் பந்தயத்துக்கு தடை: ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நாய்கள்

  • August 1, 2026
  • 0 Comments

நியூசிலாந்தில் நாய் பந்தயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 150 பந்தய நாய்கள் சிறப்பு விமானங்கள் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. விலங்குகள் நலன் சார்ந்த கவலைகளால் நியூசிலாந்தில் இந்த விளையாட்டு நிறுத்தப்பட்டாலும், ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் இது இன்னும் சட்டப்பூர்வமாகவே உள்ளது. இந்த நாய்கள் “துணை விலங்குகள்” என்ற அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டாலும், அவை அங்கு மீண்டும் பந்தயங்களில் ஈடுபடுத்தப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த இடமாற்றம் ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே இருக்கும் மறுவாழ்வுச் சிக்கல்களை மேலும் […]

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். இலங்கை செய்தி

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணி குறித்து அமைச்சர் ஆராய்வு

  • August 1, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். வட மாகாணத்தின் விமானப் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். இதன்போது, பயணிகள் […]

ஈரான் போரில் வெற்றி பெற்றுவிட்டதாக ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும் . மூத்த பேச்சுவார்த்தையாளருமான Mohammad Bagher Ghalibaf தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

ஈரான் போரில் வென்றுவிட்டது: சபாநாயகர் Ghalibaf தெரிவிப்பு

  • August 1, 2026
  • 0 Comments

ஈரான் போரில் வெற்றி பெற்றுவிட்டதாக ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும், மூத்த பேச்சுவார்த்தையாளருமான Mohammad Bagher Ghalibaf தெரிவித்துள்ளார். இந்த வெற்றியை நாட்டின் நீண்டகால ஸ்திரத்தன்மைக்காக மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பிரகாசமான எதிர்காலம் குறித்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஈரானிய நாடாளுமன்ற ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் உரையாற்றியபோதே காலிபாப் இந்த கருத்துக்களை வெளியிட்டதாக தஸ்னீம் (Tasnim) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு வலிமையான […]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்றும், அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுடனேயே மக்களும் இருக்கின்றனர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இலங்கை செய்தி

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: ஆளுங்கட்சிக்குள் குழப்பமா?

  • August 1, 2026
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்றும், அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுடனேயே மக்களும் இருக்கின்றனர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: “நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடித்து, மக்களை வழக்குச் சுமைகளில் இருந்து விடுவிப்பதே எமது பிரதான நோக்கமாகும். அண்மையில் நடைபெற்ற இரு தேர்தல்களின்போதும் இதற்காகவே மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். இதன் […]

உலகம்

அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது பிணைத் தொகை செலுத்தும் திட்டத்தை நிரந்தரமாக்க தீர்மானம்

  • August 1, 2026
  • 0 Comments

அமெரிக்க விசாக்களுக்கு விண்ணப்பிக்கும்போது பிணைத் தொகை செலுத்தும் திட்டத்தை நிரந்தரமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பொன்றில், பெரும்பாலும் ஆப்பிரிக்கா  உள்ளிட்ட 50 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா கோரி விண்ணப்பிக்கும் போது பிணைத் தொகையாக 20,000 டொலர்களை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வணிகம் மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்காக வழங்கப்படும் B1 மற்றும் B2 விசாக்களுக்குப் பொருந்தும். அமெரிக்க வெளியுறவுத் துறை, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் நிதித் துறை […]

ஐரோப்பா

கிரீஸில் ஒரேநாளில் 70இற்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவல்

  • August 1, 2026
  • 0 Comments

கிரீஸில் நேற்று 70 இற்கும் மேற்பட்ட  இடங்களில் காட்டுத்தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள சில பகுதிகளில் காட்டுத்தீ வேகமாக பரவியதாகவும், இதனால் அந்த பகுதிகளில் இருந் மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்காக அதிகாரிகள் நீர் குண்டு வீசும் விமானங்களை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிரேக்க தீயணைப்புப் படை அதிகபட்ச எச்சரிக்கை நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளது.  

வட ஆப்பிரிக்காவில் உள்ள தனது 'செவுடா' (Ceuta) பகுதிக்குள் நுழைந்த பெருந்திரளான புலம்பெயர்ந்தோரின் படையெடுப்பை ஸ்பெயின் அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஸ்பெயினுக்குள் ஊருடுவியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்

  • August 1, 2026
  • 0 Comments

வட ஆப்பிரிக்காவில் உள்ள தனது ‘செவுடா’ (Ceuta) பகுதிக்குள் நுழைந்த பெருந்திரளான புலம்பெயர்ந்தோரின் படையெடுப்பை ஸ்பெயின் அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது. தரை மற்றும் கடல் வழியாக எல்லையைக் கடந்த 50,000-க்கும் மேற்பட்ட மக்களில் பெரும்பான்மையானோர் தாங்களாகவே மீண்டும் தங்களது தாய்நாட்டிற்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். செவுடாவில் உள்ள ஸ்பெயின் அரசாங்கப் பிரதிநிதி தெரிவிக்கையில், எல்லையின் ஸ்பெயின் பகுதியில் 57 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மொராக்கோ பகுதியில் மேலும் சிலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார். எல்லை வேலியாக உள்ள தடுப்புச் சுவரில் […]

உலகம்

பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்ட FIFA தீர்மானம்

  • August 1, 2026
  • 0 Comments

உலகக் கோப்பைப் போட்டிகளில் தனியார் பங்குகளை விற்பனை செய்வதற்கான தனது முன்மொழியப்பட்ட திட்டத்தைக் கைவிட ஃபிஃபா முடிவு செய்துள்ளதாக தலைவர் கியானி இன்ஃபான்டினோ  அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் கால்பந்து சங்கங்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை மற்றும் பிற முக்கியப் போட்டிகளை நடத்துவதற்காக 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒரு புதிய துணை நிறுவனத்தை அமைக்கப்போவதாகவும், தனது பங்குகளில் 20 சதவீதத்தை வெளி முதலீட்டாளர்களுக்கு விற்கப்போவதாகவும் […]

இலங்கை

காற்றின் வேகம் திடீரென அதிகரிப்பு – கடலுக்கு செல்ல வேண்டாம்

  • August 1, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய படகுகள் கடலுக்குச் செல்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்ய மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் நேற்று இரவு முதல் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றராக அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் களுத்துறை (பேருவளை வரை) ஆகிய கடல் பகுதிகளில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் […]

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 104 புதிய 'மெட்ரோ' பஸ்கள், வரும் செப்டம்பர் மாதம் முதல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இலங்கை செய்தி

தலைநகர் கொழும்பு வீதிகளை அலங்கரிக்கவுள்ள மெட்ரோ பஸ்கள்

  • August 1, 2026
  • 0 Comments

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 104 புதிய ‘மெட்ரோ’ பஸ்கள், வரும் செப்டம்பர் மாதம் முதல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன. ராகமை முதல் பத்தரமுல்ல வரையிலான வழித்தடங்களில் இந்தப் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் இயக்கப்படும் முக்கிய மத்திய நிலையமாகப் பொரளை விளங்கும் என்று ‘மெட்ரோ பஸ்’ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். முழுமையாகக் குளிரூட்டப்பட்ட சொகுசு வசதிகளைக் கொண்ட மெட்ரோ பஸ்களே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பஸ்களில் பயணக் கட்டணம் செலுத்தும் நடைமுறை முற்றிலும் […]