ஈரான் போரில் வென்றுவிட்டது: சபாநாயகர் Ghalibaf தெரிவிப்பு
ஈரான் போரில் வெற்றி பெற்றுவிட்டதாக ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும், மூத்த பேச்சுவார்த்தையாளருமான Mohammad Bagher Ghalibaf தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியை நாட்டின் நீண்டகால ஸ்திரத்தன்மைக்காக மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பிரகாசமான எதிர்காலம் குறித்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஈரானிய நாடாளுமன்ற ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் உரையாற்றியபோதே காலிபாப் இந்த கருத்துக்களை வெளியிட்டதாக தஸ்னீம் (Tasnim) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு வலிமையான ஈரானைக் கட்டியெழுப்புவதற்கான எந்தவொரு முயற்சியும் இதிலிருந்தே தொடங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், நாட்டின் உயர் தலைவரின் (Supreme Leader) நிர்வாக அதிகாரம் மற்றும் ஆற்றலை விரிவாக்குவதற்கே அதிகாரிகள் முதன்மையான முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.




