இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 15 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 72 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை

புதிய உச்சம் – டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்வு

  • August 16, 2026
  • 0 Comments

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 92,011  ஆக உயர்ந்துள்ள அதேநேரம் மரணங்களின் எண்ணிக்கை 68  ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிரங்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அறிவிப்பின்படி, மேற்கு மாகாணத்தில் அதிகளவிலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். 48,725 தொற்றாளர்களத் மேற்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும், இது பதிவு செய்யப்பட்ட சதவீத்தின்படி, 52.96 வீதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெற்கு மாகாணத்தில் 13,533 நோய்த்தொற்றுகளுடன் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய மாகாணத்தில் […]

ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள வட ஆப்பிரிக்க பிராந்தியமான செவுட்டாவிற்குள் (Ceuta) சட்டவிரோதமாக நுழைய முயன்ற 111 பேரை மொராக்கோ பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். செய்தி முக்கிய செய்திகள்

ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய முயன்ற 111 பேர் மொராக்கோவில் கைது

  • August 16, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள வட ஆப்பிரிக்க பிராந்தியமான செவுட்டாவிற்குள் (Ceuta) சட்டவிரோதமாக நுழைய முயன்ற 111 பேரை மொராக்கோ பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளங்கள் வாயிலாக மீண்டும் பெருமளவில் ஊடுருவ அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து எல்லையின் இருபுறமும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஜூலை 30 அன்று 72,000-க்கும் மேற்பட்ட அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் செவுட்டா எல்லைக்குள் திடீரெனப் புகுந்தனர். அந்தப் பேரிடர் சம்பவத்தின் போது ஐரோப்பிய மண்ணை அடைய […]

கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கொலம்பியாவில் பேரழிவு: வரிகளை இடைநிறுத்துமாறு ட்ரம்பிடம் கோரிக்கை

  • August 16, 2026
  • 0 Comments

கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்து பெரும் பேரிடர் ஏற்பட்டுள்ள நிலையில், கொலம்பியா பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளைத் தற்காலிகமாக ரத்து செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் கொலம்பியாவின் புதிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா (Abelardo de la Espriella) கோரிக்கை விடுத்துள்ளார். நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ள கொலம்பிய தொழிலதிபர்களுக்கும் வணிகர்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில், ஜூலை இறுதியில் 10%-லிருந்து 12.5%-ஆக […]

ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் புதிய துப்பாக்கி மீட்புத் திட்டத்தை (Gun Buyback Scheme) நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் போட்டியிடத் தயாராக இருப்பதாக மாநில முதல்வர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் புதிய துப்பாக்கி மீட்புத் திட்டம்: 2.74 லட்சம் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்ய முடிவு

  • August 16, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் புதிய துப்பாக்கி மீட்புத் திட்டத்தை (Gun Buyback Scheme) நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் போட்டியிடத் தயாராக இருப்பதாக மாநில முதல்வர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்துள்ளார். “இந்த விவகாரம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு மிக முக்கியமானது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை, மாநில முதல்வர் கிறிஸ் மின்ஸ் மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிவிப்பில், தெருக்களில் […]

துருக்கி , சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்தான கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கையில் எகிப்தும் இணைவதற்குக் வாய்ப்புள்ளதாக துருக்கி ஜனாதிபதி Recep Tayyip Erdogan ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

துருக்கி, சவுதி, பாகிஸ்தான் பாதுகாப்பு கூட்டணியில் இணைகிறது எகிப்து

  • August 16, 2026
  • 0 Comments

துருக்கி , சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்தான கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கையில் எகிப்தும் இணைவதற்குக் வாய்ப்புள்ளதாக துருக்கி ஜனாதிபதி Recep Tayyip Erdogan ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஒப்பந்தம் பிற நாடுகளின் இணைப்பிற்கும் திறந்தே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அல் ஜசீரா அரபிக் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது, ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கை’ (Mecca Joint Defence Agreement) மூலம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் […]

காட்டுத் தீயால் பற்றி எரியும் ஐரோப்பா: பிரான்சில் 500 பேர் கைது ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

காட்டுத் தீயால் பற்றி எரியும் ஐரோப்பா: பிரான்சில் 500 பேர் கைது

  • August 15, 2026
  • 0 Comments

ஐரோப்பியக் கண்டம் முழுவதும் நிலவும் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் பல நாடுகளில் காட்டுத்தீ தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்சில் கோடைகாலம் தொடங்கியது முதல் காட்டுத்தீயைப் பற்றவைத்த சந்தேகத்தின் பேரில் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குரோஷியாவின் சுற்றுலாத் தலம் ஒன்றில் வெள்ளக்கிழமையன்று ஏற்பட்ட காட்டுத்தீ வீடுகளைச் சூழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். அத்துடன், 40 பேர் காயமடைந்தனர். மேலும், மிகவும் தீவிரமான காட்டுத்தீ ஆபத்து கொண்ட பகுதிகள் கண்டம் முழுவதும் நீடித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் […]

ஐரோப்பாவிலேயே மிக உயரமானது எனக் கருதப்படும் புனித கன்னி மரியாவின் Virgin Mary பிரம்மாண்ட சிலை ஒன்று, போலந்தின் புகழ்பெற்ற கம்யூனிச எதிர்ப்புத் தலைவரான லேக் வலேசா (Lech Walesa) முன்னிலையில் சனிக்கிழமையன்று ஒரு சிறிய போலந்து கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஐரோப்பா செய்தி

ஐரோப்பாவின் மிக உயரமான புனித மரியா சிலை போலந்தில் திறப்பு

  • August 15, 2026
  • 0 Comments

ஐரோப்பாவிலேயே மிக உயரமானது எனக் கருதப்படும் புனித கன்னி மரியாவின் Virgin Mary பிரம்மாண்ட சிலை ஒன்று, போலந்தின் புகழ்பெற்ற கம்யூனிச எதிர்ப்புத் தலைவரான லேக் வலேசா (Lech Walesa) முன்னிலையில் சனிக்கிழமையன்று ஒரு சிறிய போலந்து கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. மத்திய போலந்தில் அமைந்துள்ள, 150-க்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட கோனோடோபி (Konotopie) கிராமத்தில், 55.6 மீட்டர் (182 அடி) உயரத்தில் கம்பீரமாக நிற்கும் இந்த நினைவிடத்தின் புனிதப்படுத்தும் விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். […]

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 08 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 15, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 53 வது நாளாக நடைபெற்றது. இதன்போது மேலும் 08 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் அடையாளம் காணப்பட்ட 10 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 107 […]

அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: ஐவர் காயம் உலகம் செய்தி

அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: ஐவர் காயம்

  • August 15, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் பல மணி நேரம் அவசரக் கட்டுப்பாடுகள் (lockdown) விதிக்கப்பட்டன. வெர்ஜீனியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் (Virginia State University) ‘குவாட் அனெக்சஸ்’ (Quad Annexes) பகுதிக்கு அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதில் பல சந்தேக நபர்களுக்குத் தொடர்பிருப்பதாகவும், காயமடைந்த 5 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அவர்களில் […]

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் சொத்து: ட்ரம்பின் கருத்துக்கு பதிலடி உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் சொத்து: ட்ரம்பின் கருத்துக்கு பதிலடி

  • August 15, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள சமீபத்திய மிரட்டல்களுக்கு ஈரானிய அதிகாரிகள் பதிலடி கொடுத்துள்ளனர். ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக பிரகடனப்படுத்தப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் இருந்து இதுபோன்ற அச்சுறுத்தல் உரைகளை ஈரான் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. அதேவேளையில், அமெரிக்காவின் அறிக்கைகள் முன்னேற்றத்தை நோக்கி நகர்வதும், பின்னர் ராணுவ நடவடிக்கை பற்றிய பேச்சுக்களுக்கு மாறுவதுமாக […]