புதிய உச்சம் – டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்வு
நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 92,011 ஆக உயர்ந்துள்ள அதேநேரம் மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிரங்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அறிவிப்பின்படி, மேற்கு மாகாணத்தில் அதிகளவிலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். 48,725 தொற்றாளர்களத் மேற்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும், இது பதிவு செய்யப்பட்ட சதவீத்தின்படி, 52.96 வீதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தெற்கு மாகாணத்தில் 13,533 நோய்த்தொற்றுகளுடன் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய மாகாணத்தில் 8,274 நோய்த்தொற்றுகளும், சபரகமுவ மாகாணத்தில் 7,558 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.
மாவட்ட அளவில், கம்பஹா மாவட்டத்தில் 19,631 டெங்கு நோய்த்தொற்றுகளுடன் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
கொழும்பில் 18,245 வழக்குகளும், அதனைத் தொடர்ந்து கண்டியில் 6,613, மாத்தறையில் 6,036, களுத்துறை 5,951, காலியில் 5,039 மற்றும் இரத்தினபுரவில் 4,935 வழக்குகளும் பதிவாகியுள்ளன.




