உலகம் செய்தி

அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: ஐவர் காயம்

அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: ஐவர் காயம்

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் பல மணி நேரம் அவசரக் கட்டுப்பாடுகள் (lockdown) விதிக்கப்பட்டன.

வெர்ஜீனியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் (Virginia State University) ‘குவாட் அனெக்சஸ்’ (Quad Annexes) பகுதிக்கு அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதில் பல சந்தேக நபர்களுக்குத் தொடர்பிருப்பதாகவும், காயமடைந்த 5 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

“வெர்ஜீனியா மாநிலப் பல்கலைக்கழக காவல் துறையும் செஸ்டர்பீல்ட் கவுண்டி காவல் துறையும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன” என்று பல்கலைக்கழக அறிக்கை தெரிவிக்கிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி