இலங்கை

06 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

நாட்டின் 06 மாவட்டங்களுக்கு கடும் வெப்பநிலைக்குறிய மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இயற்கைப் பேரிடர் முன் எச்சரிக்கை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாளை (31) பகல் நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய கிழக்கு மாகாணம் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கே  மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள்  நீரேற்றத்துடன் இருக்கவும், கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்க்கவும், முடிந்தவரை நிழலை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெளிப்புறப் பணிகளில் ஈடுபடுவோர் நிழலான இடங்களில் அடிக்கடி ஓய்வெடுக்குமாறும், உட்புறப் பணிகளில் ஈடுபடுவோர் முதியவர்கள் மற்றும் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாகன ஓட்டிகள் குழந்தைகளை வாகனங்களுக்குள் கவனிக்காமல் விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க, பொதுமக்கள் இலகுவான, வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்