ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

காட்டுத் தீயால் பற்றி எரியும் ஐரோப்பா: பிரான்சில் 500 பேர் கைது

காட்டுத் தீயால் பற்றி எரியும் ஐரோப்பா: பிரான்சில் 500 பேர் கைது

ஐரோப்பியக் கண்டம் முழுவதும் நிலவும் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் பல நாடுகளில் காட்டுத்தீ தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்சில் கோடைகாலம் தொடங்கியது முதல் காட்டுத்தீயைப் பற்றவைத்த சந்தேகத்தின் பேரில் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குரோஷியாவின் சுற்றுலாத் தலம் ஒன்றில் வெள்ளக்கிழமையன்று ஏற்பட்ட காட்டுத்தீ வீடுகளைச் சூழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். அத்துடன், 40 பேர் காயமடைந்தனர்.

மேலும், மிகவும் தீவிரமான காட்டுத்தீ ஆபத்து கொண்ட பகுதிகள் கண்டம் முழுவதும் நீடித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

மேற்கு ஜெர்மனி மற்றும் தென்மேற்கு பிரான்சில் உள்ள கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

கிரேக்கத்தில் தீப்பற்றி எரிந்த கடற்கரைகளில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், ஜூலை 1 முதல் நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் தொடர்பாக 183 சிறுவர்கள் உட்பட 474 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70% பேர் வேண்டுமென்றே தீ வைத்ததாகவும், மீதமுள்ளவர்கள் தற்செயலாகத் தீ வைத்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி