ஏழை மக்களின் நிதியை கொள்ளையடித்த பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வசும நிதி மோடிச தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08 ஆம் திகதிவரை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பீட்டர் போல் நேற்று (25) உத்தரவிட்டுள்ளார். நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வசும பிரிவுக்குப் பொறுப்பாக செயற்பட்ட ஹட்டன்-டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண்ணொருவரும், ஹட்டன்-டிக்கோயா காபெக்ஸ் கிராமத்தை சேர்ந்த 32 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் சார்பில் நீதிமன்றத்தில் […]













