பெல்ஜியத்தில் அச்சுறுத்தலாக மாறியுள்ள துப்பாக்கி கலாச்சாரம் – காப்பாற்ற வருமாறு அழைப்பு
பெல்ஜியத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
பிரஸ்ஸல்ஸ் ரயில் நிலையத்தில் நேற்று இரவும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து மேயர் ஜீன் ஸ்பினெட் Jean Spinette யாராவது வந்து எங்களை காப்பாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
“மூன்று ஆண்டுகளாக நான் கூடுதல் படையினரைக் கேட்டு வருகிறேன்,” என்றும் அவர் கூறினார்.
2026-ல் பரந்த பிரஸ்ஸல்ஸ் பிராந்தியம் முழுவதும் குறைந்தது 66 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




