ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், வடகொரிய வெளியுறவு அமைச்சர் சோ சன் ஹுயை (Choe Son Hui) ஞாயிற்றுக்கிழமை கிரெம்ளினில் (Kremlin) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். உலகம் செய்தி

உக்ரைன் போரில் உதவி: வடகொரியாவுக்கு ரஷ்ய ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

  • July 20, 2026
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், வடகொரிய வெளியுறவு அமைச்சர் சோ சன் ஹுயை (Choe Son Hui) ஞாயிற்றுக்கிழமை கிரெம்ளினில் (Kremlin) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, ரஷ்யா மேற்கொள்ளும் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு’ வடகொரியா அளித்து வரும் உதவிகளுக்காக அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாகக் கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டில், ரஷ்யாவின் மேற்குப் பகுதியான குர்ஸ்க் (Kursk) பிராந்தியத்திற்குள் உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ஊடுருவலை முறியடிக்க வடகொரியப் படைகள் ரஷ்யாவிற்கு உதவின. இரு […]

இந்தியா செய்தி

ஈரான் பயணம் – இந்திய குடிமக்களுக்கு எச்சரிக்கை

  • July 20, 2026
  • 0 Comments

ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக அங்கு செல்வதை தவிர்க்குமாறு இந்திய மத்திய அரசாங்கம் மக்களை வலியுறுத்தியுள்ளது. ஈரானில் நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் மோதல்கள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு சூழல் சீரடையும் வரை அங்கு செல்வதை தள்ளிவைக்குமாறும், ஏற்கனவே அங்கு இருப்பவர்கள் கிடைக்கக்கூடிய வணிக ரீதியான விமான சேவைகள் மூலம் வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறும்  மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதலில்,  “சமீப நாட்களாக ஈரானில் நிலையற்ற தன்மை மற்றும் மோதல்கள் […]

குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கை செய்தி

குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா குறித்து விசாரணைகள் ஆரம்பம்

  • July 20, 2026
  • 0 Comments

குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை எதிர்வரும் 25ம் திகதி வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்பாட்டு குழுவின் சார்பில் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் சதீஸ் வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறை கலவரத்தின் போது குட்டிமணி […]

Faishal Ibrahim resigns உலகம் செய்தி

பெண்ணுடன் தொடர்பு – சிங்கப்பூர் அமைச்சர் ராஜினாமா

  • July 20, 2026
  • 0 Comments

பெண்ணொருவருடனான தொடர்புகள் காரணமாக, சிங்கப்பூரின் முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் பைஷல் இப்ராஹிம் (Faishal Ibrahim) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) தெரிவித்துள்ளார். “அவர்களது பெரும்பாலான தொடர்புகள் இணையவழிச் செய்திகள் மூலமாகவே நடந்துள்ளன,பொதுநிகழ்ச்சிகளின் இடைவேளைகளிலும் அவர்கள் சந்தித்துக்கொண்டனர். ” என்று திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வோங் குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் துன்புறுத்தல் (Harassment) குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளதாகவும், இது குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் […]

ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவிற்குப் பயணம் செய்து, அந்த அமைப்பில் உறுப்பினராக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆஸ்திரேலியப் பெண் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஐஎஸ் பயங்கரவாத வழக்கு: ஆஸ்திரேலியப் பெண்ணுக்கு பிணை

  • July 20, 2026
  • 0 Comments

ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவிற்குப் பயணம் செய்து, அந்த அமைப்பில் உறுப்பினராக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆஸ்திரேலியப் பெண் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. நான்கு குழந்தைகளின் தாயான ரயான் எல் ஹூலி (Rayann El Houli) என்பவர், தடைசெய்யப்பட்ட மோதல் பகுதிக்கு பயணம் செய்ததாகவும், ஐஎஸ் அமைப்பில் இணைந்ததாகவும் கடந்த மே மாதம் குற்றம் சாட்டப்பட்டார். 34 வயதான இவரது பிணை மனுவை மெல்போர்ன் நீதிபதி பிரெட் சோனட் திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டார். குற்றச்சாட்டுகளின் […]

இந்தியா செய்தி

கரப்பான்பூச்சி ஜனநாயக் கட்சியினரைக் கலைக்க தடியடி

  • July 20, 2026
  • 0 Comments

இந்திய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி காவல்துறை தடியடி நடத்தியது. நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று நாடாளு​மன்​றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இன்று ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி காவல்துறை லேசான […]

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை 21 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிப்பு

  • July 20, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை 21 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜுலை மாதத்துக்குரிய நாடாளுமன்ற அமர்வு நாளை 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. எனவே, 21 ஆம் திகதி கையளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவ்வாரத்துக்குள் நிச்சயம் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். நீர் கொழும்பு சிறைச்சாலை கலவரத்தை மையப்படுத்தியே இப்பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. அவசர விடயமாக கருதி இதனை […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையை உலுக்கும் மர்ம மரணங்களின் பின்னணியில் ராஜபக்சக்கள்?

  • July 20, 2026
  • 0 Comments

நாட்டில் யாராவது தற்கொலை செய்துகொண்டால் கூட, அது ராஜபக்சக்களின் வேலையாக இருக்கலாம் என விமர்சிக்கும் அளவுக்கு தற்போதைய நிலைமை மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “கொழும்பு துறைமுக நகரம், தாமரை கோபுரம், நெடுஞ்சாலைகள் போன்ற பாரிய உள்கட்டமைப்பு திட்டங்களை நிர்மாணித்தது யார் அல்லது முப்பதாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டு […]

உலகம்

தைவானை சுற்றி ரோந்து செல்லும் சீனக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரிப்பு

  • July 20, 2026
  • 0 Comments

தைவானை சுற்றி சீன கடலோரக் காவல் படையின் நடமாட்டம் மற்றும் ரோந்து நடவடிக்கைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாக தைவான் கடலோரக் காவல்படையின் தரவுகள் தெரிவித்துள்ளன. சீனாவின் இந்த நடவடிக்கையானது பசுபிக் கடலில் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மே மாதத்தில் சுமார் 30 கப்பல்கள் பயணித்திருந்த நிலையில் தற்போது 55 கப்பல்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் நடமாட்டங்கள் மே மாதத்தை விட ஜுன் மாதத்தில் 83 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவானுக்கு எதிரான பெய்ஜிங்கின் சமீபத்திய அழுத்தப் பிரச்சாரத்தில் […]

உலகம்

அரிசோனாவில் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் படுகாயம்

  • July 20, 2026
  • 0 Comments

அரிசோனாவின் (Arizona)  டக்சன் (Tucson) நகரின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள வணிகப் பகுதியில் நேற்று அதிகாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் சந்தேகநபர் உட்பட 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில், பொலிஸ் அதிகாரிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்டதாகவும், இதனைத் தொடர்ந்தே சம்பவ இடத்திற்கு சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது தாக்குதல்தாரியை எதிர்கொண்ட பொலிஸார் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது […]