ஐரோப்பா

ஹங்கேரியில் கோர விபத்து – எழுவர் பலி!

  • June 12, 2026
  • 0 Comments

ஹங்கேரியில், கியோர் அருகே உள்ள M1 நெடுஞ்சாலையில் சிறிய ரக பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஏழு பேர் உயிரழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில் கட்டுமான நடவடிக்கையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது  பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த அனைவரும்  வெளிநாட்டினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹங்கேரியப் பிரதமர் பீட்டர் மாக்யார் (Peter Magyar ) உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.  

இலங்கை செய்தி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து அமைச்சரவை எடுத்துள்ள முடிவு!

  • June 12, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்புக்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரியவின் தலைமையில் இக்குழு அமையவுள்ளது. மேற்படி குழுவில் இடம்பெற வேண்டிய உறுப்பினர்களின் விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு , 1. ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ. 2. நிதி மற்றும் நிறுவன மூலோபாய நிபுணர் தேஷால் த மெல். 3. பரிவர்த்தனை மற்றும் முதலீட்டு […]

இலங்கை செய்தி

‘அரசு மௌனம்’ – யாழில் தொடரும் போராட்டம்!

  • June 12, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் ,இன்று 8ஆவது வெள்ளிக்கிழமையாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாகவே இன்று போராட்டம் இடம்பெற்றது. வலிகாமம் வடக்கின் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் […]

உலகம் செய்தி

அமெரிக்கா, ஈரான் ஒப்பந்தத்துக்குள் ‘லெபனான்’!

  • June 12, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்படும் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்திலும் லெபனான் ஒரு அங்கமாக இருக்கும் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் Hassan Fadlallah தெரிவித்துள்ளார். லெபனான் அரசாங்கம், இஸ்ரேலுடன் தற்போது மேற்கொள்ளும் நேரடிப் பேச்சுவார்த்தைகள் தெற்குப் பகுதியில் எவ்விதத் தீர்வையும் வழங்கவில்லை எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். லெபனான் அரசு நாட்டின் நலன்களை விட்டுக்கொடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள Hassan Fadlallah, பலம் வாய்ந்த நிலையில் இருந்து நடத்தப்படும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளையே ஆதரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் தொடர்ச்சியான […]

உலகம்

சிக்கலான அரசியல் கொள்கைகள் : குடியுரிமையை துறந்த அமெரிக்கர்கள்!

  • June 12, 2026
  • 0 Comments

2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 5,000 அமெரிக்கர்கள் தங்களின் குடியுரிமையை துறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். பெரும்பாலும் நிதிசார்ந்த விடயங்களுக்காகவே மக்கள் குடியுரிமையை துறக்கின்றனர். அமெரிக்காவில்  வசிப்பிடத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், குடியுரிமையின் அடிப்படையில் தனித்துவமாக வரி விதிக்கப்படுகிறது. இதனால், வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஆண்டுதோறும் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இதுவும் அமெரிக்கர்கள் குடியுரிமையை துறக்க வழிவகுத்துள்ளது. அதேநேரம் சிலர் நிதி சார்ந்த காரணங்களைத் தாண்டி,  தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களையும் […]

ஐரோப்பா செய்தி

பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் பிரிட்டன் பிரதமர்!

  • June 12, 2026
  • 0 Comments

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து வளங்களும் ராணுவத்திற்கு வழங்கப்படும் என்று பிரித்தானியப் பிரதமர் Keir Starmer உறுதியளித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் John Healey விலகியுள்ள சூழ்நிலையிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கத்தின் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் குறித்தும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை, ஆயுதப் படைகளின் அமைச்சர் Al Carns நேற்று நள்ளிரவில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள போதிலும், அது குறித்து பிரதமர் இதுவரை பகிரங்கமாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், நாட்டின் […]

அரசியல் இலங்கை செய்தி

அன்று போராடியவர்கள் இன்று AC அறையில்: நாமல் கொதிப்பு!

  • June 12, 2026
  • 0 Comments

“வடக்கில் ஒரு கதையும், கிழக்கில் வேறொரு கதையும் இனிவரும் காலங்களில் பேசமுடியாது.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார். திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று (12), நடைபெற்ற திருகோணமலை தொகுதி ஆதரவாளர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச் இவ்வாறு கூறினார். “தொழிற்சாலைகள் மூடப்படும்போது அதற்கு எதிராக ஆளுங்கட்சியினர் குரல் எழுப்புவதில்லை. ஆனால் எதிரணியில் இருக்கும்போது போராடினார்கள். கடந்த காலங்களில் ஏழை மக்களுக்காக வீதிகளில் இறங்கி போராடியவர்கள் […]

உலகம்

03 வருட கோமா!! 41 ஆவது வயதில் பற்றிய மரணம்! விடைப்பெற்றார் தாய்லாந்து இளவரசி!!

  • June 12, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் மன்னர் மகா வஜிரலோங்க்கோர்னின் மூத்த மகளான இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் (Bajrakitiyabha Mahidol) தனது 41 ஆவது வயதில் காலமானார். இளவரசி பா என்று அறியப்பட்ட இவர் கடந்த 03 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவர் பயிற்சி பெற்ற வழக்கறிஞர் ஆவார். குறிப்பாக, சிறையில் உள்ள தாய்லாந்துப் பெண்களுக்கு  தனது ‘இன்ஸ்பயர்’ திட்டத்தின் மூலம் பல உதவிகளை செய்துள்ளார். 2022-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், நாய்களுக்குப் பயிற்சி அளிக்கும்போது மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து அவர் […]

உலகம் செய்தி

மீண்டும் பரபரப்பு! ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் பதிலடி!!

  • June 12, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், விரைவில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும் என்று வியாழக்கிழமையன்று டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் பேச்சுவார்த்தையாளர்கள் ஈரானுடன் ஒரு சிறந்த சமரசத்தை எட்டியுள்ளதால், அந்தத் தாக்குதல்களை ரத்து செய்வதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட […]

உலகம் செய்தி

தென்கொரியா முன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டுகள் சிறை!

  • June 12, 2026
  • 0 Comments

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி Yoon Suk Yeol இற்கு 30 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி Yoon Suk Yeol கடந்த 2024-ஆம் ஆண்டு ராணுவச் சட்டத்தைப் பிறப்பிப்பதற்காக, வேண்டுமென்றே வட கொரியா மீது ட்ரோன்களை ஏவிச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் எதிரிக்கு உதவியது போன்ற குற்றங்களுக்காக அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. முன்னதாக, உள்நாட்டுப் புரட்சிக்குத் தலைமை […]