உலகம் செய்தி

பயங்கரவாதத் தாக்குதலா? விசாரணை வேட்டை தீவிரம்!

  • April 29, 2026
  • 0 Comments

லண்டன் Golders Green பகுதியில் யூதர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத சம்பவமா என பொலிஸார் விசாரணை வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர். தாக்குதலை நடத்திய 45 வயது சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த இரு ஆண்கள் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. 30 மற்றும் 70 வயது மதிக்கத்தக்க இரு ஆண்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர் எனவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தாக்குதல் நடத்தியவரின் பின்னணி மற்றும் […]

உலகம் செய்தி

லண்டனில் பயங்கரம்: யூதர்கள்மீது கத்திக்குத்து தாக்குதல்!!

  • April 29, 2026
  • 0 Comments

வடக்கு லண்டனில் யூத சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். தாக்குதல் நடத்திய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனில் யூத எதிர்ப்பு வன்முறைச்சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள சூழலிலேயே இத்தாக்குதலும் இடம்பெற்றுள்ளது. தாக்குதல்களின் பின்னணியில் ஈரானியத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. மேற்படி தாக்குதல் சம்பவத்தை பிரிட்டன் பிரதமர் வன்மையாகக் கண்டித்துள்ளார். இது பயங்கரவாதத் தாக்குதலா என்பது பற்றி தகவல் […]

இலங்கை செய்தி

ஹட்டனில் கோர விபத்து: ஒருவர் பலி! 27 பேர் படுகாயம்!!

  • April 29, 2026
  • 0 Comments

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் பகுதியில் தனியார் பஸ்ஸொன்று சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இருவர் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா , போடைஸ் பிரதான வீதியில் பட்டல்கலை பாலத்திற்கு அருகாமையிலேயே இன்று பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பஸ்ஸொன்றே, மற்றொரு பஸ்ஸிற்கு வழிவிட முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த இவ்வாறு […]

உலகம் செய்தி

துப்பாக்கி ஏந்திய புகைப்படத்துடன் ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப்!

  • April 29, 2026
  • 0 Comments

ஈரான் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இனியும் தான் நல்லவராக இருக்க முடியாது எனவும் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ட்ரூத் பக்கத்தில் பொதுவாக எழுத்து மூலமாக தனது கருத்துகளைத் முன்வைக்கும் ட்ரம்ப், இம்முறை புகைப்படம் ஒன்றையும் இணைந்துள்ளார். குண்டுகள் வெடிக்கும் பின்னணியில், கையில் அதிநவீன துப்பாக்கியுடன் திரைப்பட கதாநாயகன் போல் ட்ரம்ப் அதில் காட்சியளிக்கின்றார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதல்சுற்று […]

உலகம் செய்தி

ஈரானில் 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

  • April 29, 2026
  • 0 Comments

போர் தொடங்கிய காலத்திலிருந்து ஈரானில் குறைந்தபட்சம் 21 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தின் தரவுகளின் அடிப்படையில் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், எதிர்க்கட்சிகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் உளவாளிகளுக்கு எதிராக ஈரான் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றது. இதே காலகட்டத்தில் ஈரானில் 4,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானிய அதிகாரிகளின் இத்தகைய கொடூரமான அடக்குமுறைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வன்மையாகக் கண்டித்துள்ளார். போர் சூழலுக்கு மத்தியிலும் […]

இலங்கை செய்தி

மலையக மக்களின் அறவழிப் போராட்டத்துக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு!

  • April 29, 2026
  • 0 Comments

“நாம் நீலகாமம்” அற வழிப் போராட்டத்துக்கு நாமும் எமது முழு பங்களிப்பை வழங்குவோம் – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொழும்பில் எதிர்வரும் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் சிறிதரன் எம்.பி. மேலும் கூறியவை […]

உலகம் செய்தி

நேட்டோ அமைப்பின் அவசியத்துவத்தை வலியுறுத்திய மன்னர்!

  • April 29, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் நேட்டோ கூட்டணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு நோட்டோ உதவவில்லை என ட்ரம்ப் விமர்சித்துவருகின்றார். குறித்த அமைப்பை காகிதப் புலி எனக்கூட விளாசித் தள்ளி இருந்தார். இந்நிலையிலேயே நேட்டோவுக்கு ஆதரவாக மன்னர் குரல் கொடுத்துள்ளார். அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலுக்குப் பிறகு நேட்டோவின் பாதுகாப்பு ஒப்பந்தம் பயன்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய மன்னர், தற்போதைய சவாலான உலகச் சூழலில் இந்த ஒற்றுமை அவசியம் என்பதையும் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதல் : 24 மணிநேரத்துக்குள் காசாவில் ஐவர் பலி!

  • April 29, 2026
  • 0 Comments

காசாவில் கடந்த 24 மணிநேரத்துக்குள் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஐவர் பலியாகியுள்ளனர். ஏழு பேர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. அதேவேளை, 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 72 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தற்போது போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது. போர் நிறுத்தகாலப்பகுதியில் மட்டும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

செய்தி

ஈரான் வசம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்பதில் மன்னர் உறுதி: ட்ரம்ப் தகவல்!

  • April 29, 2026
  • 0 Comments

ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்ற விடயத்தில் மன்னர் King Charles III தன்னுடன் உடன்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரிட்டன் மன்னருக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்பால் மன்னருக்கு விசேட விருந்தளிக்கப்பட்டது. இந்நிலையிலேயே ட்ரம்ப் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ட்ரம்பின் மேற்படி கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பக்கிங்ஹாம் அரண்மனை விளக்கம் அளித்துள்ளது. அதில், அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதில் பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டுள்ள நீண்டகால நிலைப்பாட்டை மன்னர் நன்கு அறிவார் […]

விளையாட்டு

மும்பை, ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்!

  • April 29, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று இரவு நடைபெறும் 41 ஆவது லீக் போட்டியில் Mumbai Indians, Sunrisers Hyderabad ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருந்தது. […]