ஜனாதிபதியை சந்தித்தார் ICC தலைவர்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர் ஜெய் ஷாவுக்கும் (Jay Shah) இடையிலான சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை கிரிக்கெட் சபையை நிர்வகிக்க அரசு தற்காலிகக் குழுவை நியமித்திருப்பது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளுக்கு முரணாக இருப்பதாகக் கருதப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி ஏற்கனவே தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதோடு, காலதாமதமின்றி ஜனநாயக முறையில் தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சந்திப்பு நடந்தது என்ற தகவலை மட்டுமே புகைப்படத்துடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. பேசப்பட்ட விடயங்கள் பற்றி இன்னும் தெரியப்படுத்தப்படவில்லை.




