ஐரோப்பா செய்தி

எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி! பிரான்ஸ் புது வியூகம்!!

  • May 22, 2026
  • 0 Comments

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விலையேற்றத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஐரோப்பா முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை குறிவைத்து இந்த வரி அமுல்படுத்தப்படவுள்ளது. பிரான்ஸ் நிதி அமைச்சர் ரொலண்ட் லெஸ்குர் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். எரிசக்தி விலைவாசி உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட உள்நாட்டு மக்களையும், சிறு வணிகங்களையும் பாதுகாக்க பிரான்ஸ் அரசு […]

இலங்கை செய்தி

14 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

  • May 22, 2026
  • 0 Comments

இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 14 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 5 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 651 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். 221 வீடுகள் பகுதியளவும், ஆறு வீடுகள்முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஆயிரத்து 479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் ஆயிரத்து 469 பேரும், களுத்துறையில் ஆயிரத்து 81 பேரும் […]

ஐரோப்பா செய்தி

ஆண்ட்ரூமீதான குற்றச்சாட்டு: விசாரணை வேட்டை தீவிரம்!

  • May 22, 2026
  • 0 Comments

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்சர்மீதான பொது அலுவலகத்தில் தவறான நடத்தை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் காவல்துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது. அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களைத் தொடர்ந்து, அவர் தனது அரசுமுறைப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டாரா என்ற கோணத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். இந்தப் புலனாய்வு ஒரு குற்றவியல் சம்பவத்துக்கு இணையான முக்கியத்துவத்துடன் கையாளப்படுவதோடு, பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து கூடுதல் தகவல்களையும் காவல்துறையினர் எதிர்பார்க்கின்றனர். […]

உலகம் செய்தி

புல்வாமா தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சுட்டுக்கொலை!

  • May 22, 2026
  • 0 Comments

புல்வாமா தாக்குதலில் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்ட தீவிரவாதி ஹம்சா புர்ஹான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் கடந்த 2019ஆம் ஆண்டு சிஆர்பிஎப் வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது வெடிபொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று மோதி பயங்கரமாக வெடித்தது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். வெடிபொருட்கள் ஏற்றி வந்த வாகனத்தை எடுத்துச் சென்றது ஜெய்ஸ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பைச் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

சமூக நீதித்துறை அமைச்சரானார் வன்னியரசு!

  • May 22, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு நேசக்கரம் நீட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர், வன்னியரசு அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். அவருக்கு சமூகநீதித் துறை அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐயூஎம்எல் கட்சியின் ஏ.எம்.ஷாஜஹான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது துறையின் கீழ் சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரியம் அடங்கும். இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விசிகவின் […]

செய்தி விளையாட்டு

முதலிடத்துடன் அடுத்த சுற்றுக்குள் நுழையுமா RCB?

  • May 22, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று நடைபெறும் 67 ஆவது லீக் ஆட்டத்தில் Royal Challengers Bengaluru (RCB), Sunrisers Hyderabad ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். RCB அணி 13 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 18 புள்ளிகளை குவித்து முதல் அணியாக play-off சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. அதேவேளையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13 ஆட்டங்களில் 8 வெற்றி, 5 தோல்விகளுடன் […]

செய்தி விளையாட்டு

படுதோல்வியுடன் வெளியேறியது CSK அணி!

  • May 22, 2026
  • 0 Comments

2026 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றோடு Chennai Super Kings (CSK) அணி வெளியேறி உள்ளது. Gujarat Titans உடனான கடைசி லீக் ஆட்டத்தில் 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் CSK அணி படுதோல்வி அடைந்தது. அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற CSK அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களைப் […]

இலங்கை செய்தி

பிள்ளையானை சிறையில் சந்தித்தது உண்மைதான்: ஒப்புக்கொண்டார் நாமல்!

  • May 22, 2026
  • 0 Comments

“போரை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கியவர்தான் பிள்ளையான். எனவே, அவர் அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டால் நாம் அவருக்காக முன்னிலையாவோம். நாம் பிள்ளையானை திருட்டுதனமாக சந்திக்கவில்லை.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் நேற்று மேலும் கூறியவை வருமாறு , “பிள்ளையானைச் சந்திப்பதற்காக நாம் சுவர் ஏறி குதித்து சிறைச்சாலைக்குள் செல்லவில்லை. சட்டப்பூர்வமாகவே அவரை சந்தித்திருந்தோம். பிள்ளையானை சந்திக்கும்போது சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் அருகில் இருந்தார். சிறைச்சாலைக்குள் இரகசிய […]

அரசியல் இலங்கை செய்தி

” வடக்கு, கிழக்கு எல்லைகளை காத்த காவலர்களே மலையக மக்கள்”

  • May 22, 2026
  • 0 Comments

“லயன் வாழ்க்கையை ஒழிக்க வேண்டும். மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்காக அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படும்.” என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். “ மலையக மக்களை நாம் தேசிய இனமாக அங்கீகரித்துள்ளோம். மலையக மக்களின் உரிமைக்காக எமது கட்சி எல்லா விதத்திலும் குரல் கொடுத்து வந்துள்ளது. மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு […]

ஆஸ்திரேலியா செய்தி

இஸ்ரேல் படைகள் கொடுமைப்படுத்தின: நாடு கடத்தப்பட்ட தன்னார்வலர்கள் குற்றச்சாட்டு!

  • May 22, 2026
  • 0 Comments

இஸ்ரேலால் காவலில் வைக்கப்பட்டிருந்த Global Sumud Flotilla குழுவைச் சேர்ந்த 11 ஆஸ்திரேலிய ஆர்வலர்கள் தற்போது துருக்கியை சென்றடைந்துள்ளனர். தனது படைகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 422 வெளிநாட்டு ஆர்வலர்களையும் நாடு கடத்திவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இவர்களில் முதல் குழுவினர் துருக்கியை வந்தடைந்துள்ளனர். இதில் 11 ஆஸ்திரேலியர்கள் உள்ளடங்கியுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் தங்களை இஸ்ரேலியப் படைகள் மிகவும் மோசமாக நடத்தியதாகவும், தாக்கியதாகவும் விடுவிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இஸ்ரேலிய அமைச்சரின் முறையற்ற நடத்தையை அந்நாட்டுப் பிரதமரே கண்டித்துள்ள நிலையில், […]

error: Content is protected !!