ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் டர்ம்ப்
ஈரானுடன் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்நாட்டின் பிக்ஏக்ஸ் மலை (Pickaxe Mountain) பகுதியையும், பாலங்கள் உள்ளிட்ட பிற உள்கட்டமைப்புகளையும் இலக்கு வைக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
இது குறித்து Fox News ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“பிக்ஏக்ஸ் மலைப் பகுதி என்பது எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையல்ல. ஈரான் விவகாரத்தில் தற்போது நாங்கள் வலுவான நிலையில் இருக்கிறோம்.
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்கவே நாம் விரும்புகின்றோம்.எனினும், ஈரான் எல்லைமீறி செயற்பட்டால் தாக்க நேரிடும்.” என ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




