இலங்கை செய்தி

ஈரான் தூதரகத்துக்கு சென்றார் சஜித்!

  • March 4, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) பிற்பகல் இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்துக்குச் சென்றார். ஈரானிய தூதரைச் சந்தித்து, மோதல்களால் உயிரிழந்த ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமெனி மற்றும் ஈரானியர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்தார். ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்தார். தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த விசேட அனுதாப குறிப்புப் பதிவேட்டில், ஈரானிய மக்கள் சார்பாக […]

இலங்கை செய்தி

ஈரான் போர்க்கப்பல்மீது தாக்குதல் நடந்துள்ளதா? இலங்கை கடற்படை கூறுவது என்ன?

  • March 4, 2026
  • 0 Comments

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் போர்க் கப்பலொன்றே அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. எனினும், குறித்த கப்பல்மீது நீர்மூழ்கி கப்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது என கடற்படை கூறியதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. விசாரணைகளின் பின்னரே அது பற்றி தெரியவரும் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே கடற்படை ஊடகப் பேச்சாளர் மேற்படி தகவலை வெளியிட்டார். “ அனர்த்தத்துக்கு உள்ளான கப்பலில் இருந்தவர்களின் உயிரைப் […]

செய்தி

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: விவசாயிகளே இடைத்தரகர்களிடம் சிக்காதீர்!

  • March 4, 2026
  • 0 Comments

“ மன்னார் மாவட்டத்தில் போதிய அளவு எரி பொருட்கள் கையிருப்பில் உள்ளது. எனவே, விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்லை இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டாம். உலர வைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி நெல்லை பாதுகாக்கவும். இவ்வாறு மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் K. Kanageswaran விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் Mannar District Secretariat இன்று (4) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். “ […]

இந்தியா

பிணவறையில் இருந்த சடலத்தை தின்ற தெரு நாய்கள்: உறவுகள் போராட்டம்!

  • March 4, 2026
  • 0 Comments

தெலுங்கானாவில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளைஞரின் சடலத்தை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்ய ஜட்செர்லா அரச வைத்தியசாலையில் பிணவறைக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டது. இந்நிலையில், காலையில் சென்று பார்த்தபோது, அந்த இளைஞரின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறி இருந்ததை அறிந்த மருத்துவர்கள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இளைஞரின் உறவினர்கள் […]

செய்தி

மீனவர்கள் மாயம்: கடற்படை நடவடிக்கை எடுக்கவில்லையென உறவுகள் கவலை!

  • March 4, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தங்கராசா அமல்ராஜ் (வயது 44), செல்வராசா ராஜ்குமார் (வயது 30) என்ற இரண்டு மீனவர்களுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் கடலில் இரண்டு நாட்கள் தங்கி இருந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கரையை வந்தடைந்திருக்க வேண்டும். இருப்பினும் இன்றுவரை திரும்பி வரவில்லை. […]

செய்தி

இலங்கை அருகே ஈரானிய போர் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்? பலர் மாயம்!

  • March 4, 2026
  • 0 Comments

இலங்கையை அண்மித்த கடலில் மூழ்கிய ஈரானிய கப்பல்மீது, நீர்மூழ்கிக் கப்பலொன்று தாக்குதல் நடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி கப்பலில் 180 பேர் வரையில் இருந்ததாகவும், 78 மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 101 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் அச் செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் எல்லைக்கு அப்பால் 40 மைல் தொலைவில் இன்று அதிகாலை ஈரானிய போர்க்கப்பல் விபத்துக்குள்ளானது. […]

இலங்கை செய்தி

போரால் இலங்கை பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கம் பற்றி ஆராய்வு!

  • March 4, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்காலத்தில் அதிகரிக்கக் கூடிய நிலைமைகளை கணிப்பது சாத்தியமற்றது என்றாலும், அனைத்துத் துறைகளிலும் ஏற்படக் கூடிய சூழ்நிலைகளைத் தொடர்ந்து கண்காணித்து அந்த சவால்களை வெற்றிகொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எரிபொருள் […]

செய்தி

புனித நகரில் ஈரான் உச்ச தலைவரின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு!

  • March 4, 2026
  • 0 Comments

ஈரான் உச்ச தலைவரின் உடல், ஈரானின் புனித நகரமான மஷாத்தில் அடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட கமெனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஈரான் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மஷாத் நகரில் திரண்டுள்ளனர். ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள், இராணுவத் தளபதிகள் , அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. போருக்கு மத்தியிலும் இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. அதேவேளை, தலைநகர் தெஹ்;ரானில் […]

கல்வி

ஈரான் கப்பலுக்கு உதவியது ஏன்? இலங்கை விளக்கம்!

  • March 4, 2026
  • 0 Comments

ஈரான் கப்பல் விபத்துக்குள்ளானமை மற்றும் அதற்கு இலங்கை வழங்கிய உதவி தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நாடாளுமன்றத்தில் இன்று (04) விளக்கமளித்தார். இலங்கைக்குரிய கடல் எல்லைக்கு அப்பால் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘ஐரிஸ் டெனா” என்ற கப்பல் விபத்துக்குள்ளாகி, மூழ்கின்றது என இன்று அதிகாலை 5:08 மணியளவில் கடற்படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாகச் செயல்பட்ட இலங்கை கடற்படை மீட்புப் படகுகளை அனுப்பி வைத்தது. கப்பலில் 180 பேர்வரை இருந்துள்ளனர். விமானப்படை மற்றும் கடற்படையின் கூட்டு […]

இலங்கை செய்தி

திருமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் சிப்பாய் கைது!

  • March 4, 2026
  • 0 Comments

திருகோணமலை வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய், வான் எல , பன்சல் கொடல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய முன்னாள் சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் பிராந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் 1,450 மில்லி கிராம் […]

error: Content is protected !!