செய்தி

புனித நகரில் ஈரான் உச்ச தலைவரின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு!

  • March 4, 2026
  • 0 Comments

ஈரான் உச்ச தலைவரின் உடல், ஈரானின் புனித நகரமான மஷாத்தில் அடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட கமெனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஈரான் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மஷாத் நகரில் திரண்டுள்ளனர். ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள், இராணுவத் தளபதிகள் , அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. போருக்கு மத்தியிலும் இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. அதேவேளை, தலைநகர் தெஹ்;ரானில் […]

கல்வி

ஈரான் கப்பலுக்கு உதவியது ஏன்? இலங்கை விளக்கம்!

  • March 4, 2026
  • 0 Comments

ஈரான் கப்பல் விபத்துக்குள்ளானமை மற்றும் அதற்கு இலங்கை வழங்கிய உதவி தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நாடாளுமன்றத்தில் இன்று (04) விளக்கமளித்தார். இலங்கைக்குரிய கடல் எல்லைக்கு அப்பால் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘ஐரிஸ் டெனா” என்ற கப்பல் விபத்துக்குள்ளாகி, மூழ்கின்றது என இன்று அதிகாலை 5:08 மணியளவில் கடற்படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாகச் செயல்பட்ட இலங்கை கடற்படை மீட்புப் படகுகளை அனுப்பி வைத்தது. கப்பலில் 180 பேர்வரை இருந்துள்ளனர். விமானப்படை மற்றும் கடற்படையின் கூட்டு […]

இலங்கை செய்தி

திருமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் சிப்பாய் கைது!

  • March 4, 2026
  • 0 Comments

திருகோணமலை வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய், வான் எல , பன்சல் கொடல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய முன்னாள் சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் பிராந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் 1,450 மில்லி கிராம் […]

இந்தியா

யூடியூப்பிலும் சாதனை படைத்த பிரதமர் மோடி!

  • March 4, 2026
  • 0 Comments

  அரசியல், இராஜதந்திரத்தில் மட்டுமல்ல சமூகவலைத்தளங்களிலும் இந்திய பிரதமர் நரேந்திர Narendra Modi மோடி ஆதிக்கம் செலுத்துகின்றார். இந்தியாவின் பிரதமராக கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் பதவியேற்றார். மக்கள் ஆணையுடன் மூன்றாவது தடவையாக அப்பதவியில் நீடிக்கின்றார். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு முதலே தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டா கிராமில் பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. இதன் மூலம் […]

விளையாட்டு

அரை இறுதிச் சுற்று இன்று ஆரம்பம்: நியூசிலாந்து. தென்னாபிரிக்கா மோதல்!

  • March 4, 2026
  • 0 Comments

ICC T20உலகக் கிண்ண கிரிக்​கெட் தொடரில் முதல் அரை இறுதி ஆட்டத்​தில் தென்னாபிரிக்காSouth Africa – நியூசிலாந்து New Zealand அணி​கள் பலப்பரீட்சை நடத்​துகின்​றன. கொல்​கத்தா ஈடன் கார்​டன் Eden Gardens மைதானத்​தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். எய்​டன் மார்க்​ரம் தலை​மையி​லான தென்னாபிரிக்கா அணி நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் இது​வரை தோல்​வியை சந்​திக்​காத அணி​யாக வலம் வரு​கிறது. லீக் சுற்​றில் 4 ஆட்​டங்​கள், சூப்​பர் 8 சுற்​றில் 3 […]

அரசியல் இலங்கை செய்தி

மத்திய கிழக்கு பதற்ற நிலை விரைவில் சீராகும்: இலங்கை நம்பிக்கை!

  • March 4, 2026
  • 0 Comments

“மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை விரைவில் சீராகும் என நம்புகின்றோம். சிலவேளை நீடித்தால்கூட அதனால் மீனவர்களுக்கு தாக்கம் ஏற்படடாத வகையில் உரிய தலையீடு மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு கடற்றொழில், நீரில் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, “ ஒரு மாத காலத்துக்கு தேவையான எரிபொருள் கைவசம் இருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது. அதன்பின்னரும் நெருக்கடி ஏற்பட்டால் மீனவர்களுக்கு […]

ஆஸ்திரேலியா உலகம்

ஈரானை எதிர்க்கிறது ஆஸ்திரேலியா: மத்திய கிழக்கில் 6 குழுக்கள் களமிறக்கம்!

  • March 4, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போரில் ஆஸ்திரேலியா நேரில் பங்கேற்காவிட்டாலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சார்பான நிலைப்பாட்டிலேயே அந்நாட்டு அரசாங்கம் உள்ளது. ஈரான் உச்ச தலைவரின் மரணத்துக்குகூட ஆஸ்திரேலியா அனுதாபம் தெரிவிக்கவில்லை. அதேபோல உச்ச தலைவருக்கு சில மசூதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டமை தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய கிழக்கில் சிக்கியுள்ள சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஆஸ்திரேலியர்களுக்கு உதவும் வகையில் ஆறு அவசரகால உதவிக் குழுக்களை அந்நாட்டு அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. வான்வழிப் போக்குவரத்து முடக்கத்தால் […]

இலங்கை செய்தி

வடக்கில் கண்ணிவெடி அகற்றல்: நோர்வேயின் ஒத்துழைப்புக்கு சஜித் நன்றி தெரிவிப்பு!

  • March 4, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சித் தலைவர் Sajith Premadasa மற்றும் இலங்கை வந்துள்ள நோர்வே நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் Andreas Gravic ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்புநேற்று (03) பிற்பகல் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு மூலோபாயங்கள் முன்வைக்கப்பட்டன. டித்வா சூறாவளிப் பாதிப்பின் போது CERF, WFP மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக நோர்வே வழங்கிய 24 மில்லியன் நோர்வே குரோனர் (NOK) மதிப்பிலான உடனடி மனிதாபிமான உதவிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தனது நன்றியைத் […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர் சூழ்நிலை: இலங்கை நாடாளுமன்றில் இரு நாள் விவாதம்!

  • March 4, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாள் விவாதம் அவசியம் என எதிர்க்கட்சி தலைவர் Sajith Premadasa கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (03) ஜனாதிபதி உரையாற்றிய பின்னர் உரையாற்றுகையிலேயே Sajith Premadasa ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தார். அத்துடன், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையால் இலங்கைக்கு நாட்டுக்கு ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் அவசியம். இதற்கான அழைப்பை கட்சி பேதமின்றி அனைத்து தரப்புகளுக்கும் […]

இலங்கை செய்தி

” உலக பொருளாதாரத்துக்கும், மனித இருப்புக்கும் அச்சுறுத்தல்”

  • March 3, 2026
  • 0 Comments

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காக மிக விரைவில் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்தச் சூழ்நிலை உலகப் பொருளாதாரத்திற்கும், மனித வாழ்வின் இருப்புக்கும் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் என்ற வகையில் சிறந்ததை எதிர்பார்க்கும் அதேவேளை, மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளவும் தயாராகி வருவதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று (02) விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி அநுர […]

error: Content is protected !!