எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி கிறிசி ஹளலகன் (Chrissy Houlahan) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

அமெரிக்க ராஜதந்திரிகள் குழு சஜித்துடன் சந்திப்பு

  • July 30, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி கிறிசி ஹளலகன் (Chrissy Houlahan) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது பொருளாதார ஒத்துழைப்பு, ஆளுகை, கல்வி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை என்பன குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கும் , ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் […]

அசாம் மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது. இந்தியா செய்தி

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 78 ஆக உயர்வு

  • July 30, 2026
  • 0 Comments

அசாம் மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது. அசாமில் வெள்ளத்தில் சிக்கி சிவசாகர் மாவட்டத்தில் இருவர் மற்றும் கோலாகாட்டில் ஒருவர் என நேற்று மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 78-ஐ எட்டியுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) தெரிவித்துள்ளது. அரசு அறிக்கையின்படி, சிவசாகர், சாரைடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நாகான், பிஸ்வநாத் மற்றும் காம்ரூப் ஆகிய ஏழு […]

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் தலை துண்டிப்பு வீடியோக்கள் உட்பட தனது தளத்தில் உள்ள பயங்கரவாத உள்ளடக்கங்களை நீக்கத் தவறியதாகக் கூறி, டெலிகிராம் (Telegram) செயலிக்கு எதிராக ஆஸ்திரேலியா , கூட்டாட்சி நீதிமன்றத்தில் (Federal Court) வழக்கு தொடரவுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பயங்கரவாத வீடியோக்கள்: டெலிகிராமிற்கு எதிராக ஆஸ்திரேலிய நீதிமன்றில் வழக்கு

  • July 30, 2026
  • 0 Comments

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் தலை துண்டிப்பு வீடியோக்கள் உட்பட தனது தளத்தில் உள்ள பயங்கரவாத உள்ளடக்கங்களை நீக்கத் தவறியதாகக் கூறி, டெலிகிராம் (Telegram) செயலிக்கு எதிராக ஆஸ்திரேலியா , கூட்டாட்சி நீதிமன்றத்தில் (Federal Court) வழக்கு தொடரவுள்ளது. டெலிகிராமில் உள்ள பயங்கரவாத உள்ளடக்கங்கள் குறித்து ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்பு ஆணையர் (eSafety Commissioner) ஜூலி இன்மான் கிராண்ட் வியாழக்கிழமை இந்த சட்ட நடவடிக்கையை அறிவித்தார். இதன் மூலம் டெலிகிராம் நிறுவனம் […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் அச்சுறுத்தல் தொடரும்வரை ஓயமாட்டோம்: ஈரான் எச்சரிக்கை

  • July 30, 2026
  • 0 Comments

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC), ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அங்குள்ள ஒரு விமானப்படை தளம் மற்றும் கட்டளை மையம் (command centre) ஆகியவற்றைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடரும் வரை, ஈரானிய தரப்பின் எதிர்ப்பும் தொடர்ந்து கொண்டிருக்கும் என்றும், தெஹ்ரானுக்கு எதிரான அச்சுறுத்தல் நிறைந்த பேச்சை அமெரிக்க அதிகாரிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், ஈரானிய தரப்பால் அங்கீகரிக்கப்படாத […]

உலகம் செய்தி

எகிப்து துறைமுக சேமிப்பு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

  • July 30, 2026
  • 0 Comments

ஈரான் மீது புதிய வான்வழித் தாக்குதல்களை புதன்கிழமை இரவு நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. எகிப்தின் மத்தியதரைக் கடல் பகுதியிலுள்ள டாமியேட்டா (Damietta) துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த அமெரிக்காவுக்குச் சொந்தமான எரிவாயு சேமிப்புக் கப்பல் (gas storage tanker) மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பிரித்தானிய கடற்படை பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே (Ambrey) தனது முதற்கட்ட மதிப்பீட்டில் தெரிவித்தது. எகிப்தின் பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை உறுதிப்படுத்திய போதிலும், ட்ரோன் தாக்குதல் குறித்து […]

ஆஸ்திரேலியா Northern Territory பிராந்திய ஆளுநர் டேவிட் கான்னலியை (David Connolly) தாக்கினார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சாலமன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூக் கோஸ்லிங் (Luke Gosling) கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் ஆளுநரை தாக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கைது

  • July 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா Northern Territory பிராந்திய ஆளுநர் டேவிட் கான்னலியை (David Connolly) தாக்கினார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சாலமன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூக் கோஸ்லிங் (Luke Gosling) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 18 அன்று டார்வின் நகரில் நடைபெற்ற ‘என்.டி தாய்லாந்து பிரமாண்ட திருவிழா’வின் (NT Thailand Grand Festival) போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் இது குறித்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், ஆளும் லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை இன்று […]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அவசரமாக எடுக்கப்பட்டுள்ள முடிவை ஒட்டுமொத்த நீதித்துறையும் கடுமையாக எதிர்க்கின்றது. இலங்கை செய்தி

நீதித்துறை தொடர்பான அரசின் முடிவுக்கு சட்டத்தரணிகள் சங்கம் போர்க்கொடி

  • July 30, 2026
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அவசரமாக எடுக்கப்பட்டுள்ள முடிவை ஒட்டுமொத்த நீதித்துறையும் கடுமையாக எதிர்க்கின்றது. இது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு விழுந்த அடியாகும்; இதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைப்பின் அனைத்து […]

இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியது முதல், காசா முனையில் 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு பெற்றோரையேனும் இழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பெற்றோரை இழந்து தவிக்கும் 60,000 காசா குழந்தைகள்

  • July 29, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியது முதல், காசா முனையில் 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு பெற்றோரையேனும் இழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறைந்தது 60,737 குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு பெற்றோரையேனும் இழந்துள்ளனர் . இதில் 52,095 குழந்தைகள் தங்களது தந்தையையும், 5,929 குழந்தைகள் தங்களது தாயையும், 2,713 குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்துள்ளனர். மேலும், 8,858 பேரைக் கொண்ட 2,276 குடும்பங்கள் “சிவில் பதிவேட்டில் இருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும்” மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் […]

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் இரவில் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வாஷிங்டன் ஈரானை "கடுமையாகத் தாக்கி நசுக்கப் போகிறது" என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் செய்தி

ஜோர்தானிலுள்ள அமெரிக்க இலக்குமீது ஈரான் தாக்குதல்: ட்ரம்ப் கடும் சீற்றம்

  • July 29, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் இரவில் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வாஷிங்டன் ஈரானை “கடுமையாகத் தாக்கி நசுக்கப் போகிறது” என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். Fox News அலைவரிசைக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், “நாங்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம். அவர்களுக்கு பலத்த அடி காத்திருக்கிறது,” என்று ட்ரம்ப் கூறியுள்ளார். ஜோர்தானில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய இத்தாக்குதலை ஒரு “திடீர் தாக்குதல்” எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், […]

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய அத்துமீறல் மற்றும் சட்டவிரோத அடிமடி இழுவை மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டித்து, யாழ்ப்பாணம் - தீவகப் பகுதி மீனவர்கள் இன்று கடலில் இறங்கி கறுப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை செய்தி

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடலில் கறுப்புக்கொடி போராட்டம்

  • July 29, 2026
  • 0 Comments

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய அத்துமீறல் மற்றும் சட்டவிரோத அடிமடி இழுவை மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டித்து, யாழ்ப்பாணம் – தீவகப் பகுதி மீனவர்கள் இன்று கடலில் இறங்கி கறுப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிகட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் படகுகளில் கடலுக்குள் சென்ற தீவக மீனவர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தித் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், ஜனாதிபதிக்கு உடனடியாக நடவடிக்கை கோரி அவசரக் கோரிக்கை மனுவையும் கையளித்தனர். காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த இந்திய இழுவை மடி […]