அரசியல் இலங்கை செய்தி

இந்தியாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டை பயன்படுத்த தவறிய இலங்கை

“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பலவந்தமாக நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறையால், இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் தாக்கம் ஏற்படும்,” எனச் சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

“புதுடெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. இதன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் சிறப்பான வெளிவிவகாரக் கொள்கை இல்லை என்பது புலனாகிறது,” எனச் சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

“ டெல்லியில் பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு நடைபெற்றது. இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உட்பட முக்கிய நாடுகள் இவ்வமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

எனினும், இலங்கை சார்பில் இந்த உச்சி மாநாட்டில் எவரும் பங்கேற்கவில்லை. மாநாட்டைப் பற்றிய எந்தவொரு கவனமும் இன்றிச் செயல்பட்டுள்ளனர்.

புதிய அபிவிருத்தி வங்கி ஒன்றை பிரிக்ஸ் அமைப்பு ஆரம்பிக்கவுள்ளது. இது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்றதொரு அமைப்பாகச் செயற்படும். எனவே, அவ்வாறான மாநாடுகளில் பங்கேற்று நாட்டுக்குப் பயனளிக்கக் கூடிய வாய்ப்பக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, உகண்டா, நைஜீரியா ஆகிய நாடுகள் கூட இதில் பங்கேற்றிருந்தன.

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திடம் முறையான வெளிவிவகாரக் கொள்கை இல்லை என்பதற்கு இதுவே சான்றாகும். அரசாங்கத்தின் இந்த அலட்சியப்போக்கு நாட்டுக்கே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை