ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட காற்றழுத்த பிரச்சினை – 10 பயணிகள் காயம்
தாய்லாந்தின் பூக்கெட்டிலிருந்து இந்தியாவின் டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI2379) ஒன்று தரையிறங்கும்போது கடுமையான காற்றழுத்தச் சீர்குலைவை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தின் காரணமாக சில பயணிகள் லேசான காயங்களுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் விமானம் டெல்லியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இரண்டு விமானப் பணியாளர்கள் மற்றும் பத்து பயணிகள் உட்பட பலருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மற்றும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




