உலகம் செய்தி

ஈரானில் இரு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இணைய முடக்கம்!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான் அரசு அமுல்படுத்தியுள்ள இணைய முடக்கம் இரு மாதங்களுக்கு மேலாக நீடிக்கின்றது. 64 ஆவது நாளாக நீடிக்கும் இத்தடையால் மக்களின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளைத் தகர்க்கச் சிலர் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கருவிகளைப் பயன்படுத்தினாலும், அது பெரும் அபாயத்தை உள்ளடக்கியுள்ளது. இத்தகைய கருவிகளை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது ஈரானில் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றுத் தரக்கூடிய குற்றமாகக் கருதப்படுகிறது. இணையக் கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ், இந்தத் தடையால் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை […]

உலகம் செய்தி

ட்ரம்ப் நிர்வாகத்தை தட்டிக்கேளுங்கள்: அமெரிக்க மக்களிடம் ஈரான் கோரிக்கை!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்க அரசாங்கம் தொடுத்துள்ள போரை அந்நாட்டு மக்கள் தட்டிக்கேட்க வேண்டுமென ஈரான் வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலானது எவ்வித தூண்டுதலும் இன்றி நடத்தப்பட்ட ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்பாகும் என ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Esmaeil Baqaei சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்பதே ஈரானின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. இதனை வலியுறுத்தியே ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தனது எக்ஸ் தளத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு எதிராக […]

அரசியல் செய்தி

மலையகத் தமிழர்களுக்கான காணி உரிமையும், மும்முனைச் சமரும்!

  • May 2, 2026
  • 0 Comments

மும்மூர்த்திகள் இணைந்து செயல்படுவது பிரபஞ்சத்திற்கு நன்மை பயக்கும் என்பது ஐதீகம். மும்மூர்த்திகளின் ‘சங்கமமானது’ எப்போதும் சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் எனப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனை ஓரம் தள்ளிவிட்டுத் தக்கன் செய்த யாகம் தோல்வியிலேயே முடிந்தது என ஆன்மீக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவலோகத்தில் நன்மைகள் நடப்பதற்கு மும்மூர்த்திகளின் ஐக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல்தான் மலையகத் தமிழர்களுக்குரிய அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலையை வென்றெடுப்பதற்கும் ‘முத்தரப்புகளின்’ சங்கமம் காலத்தின் கட்டாயத் தேவையாகும். அதாவது மலையக அரசியல்வாதிகள், […]

உலகம் செய்தி

ட்ரம்புக்கு எதிராக திரும்பிய தீவிர விசுவாசி!

  • May 2, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா நிதி உதவி வழங்குவதை அமெரிக்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான Marjorie Taylor Greene கண்டித்துள்ளார். லெபனானில் நடக்கும் கொடூரங்களை சுட்டிக்காட்டியுள்ள அவர், தாக்குதல்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், தற்போது ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கையை வெளிப்படையாக விமர்சித்துவருகின்றார். எப்ஸ்டீன் ஊழல் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இவர்களுக்கிடையேயான அரசியல் உறவு முறிந்து போனது. இவரின் இந்த […]

உலகம் செய்தி

போர் எந்நேரத்திலும் தொடங்கலாம்!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர் மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. சர்வதேச ஒப்பந்தங்களை அமெரிக்கா மதிப்பதில்லை என்பதால், அந்நாடு எப்போது வேண்டுமானாலும் தாக்குதலைத் தொடங்கலாம் என்று ஈரான் கருதுகின்றது. அமெரிக்க அதிகாரிகளின் தற்போதைய கருத்துக்கள் வெறும் அரசியல் நாடகம் மற்றும் தங்களின் பொருளாதார நலன்களைக் காப்பதற்கான முயற்சி என்று ஈரான் ராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் எந்தவொரு ஆக்ரோஷமான நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தங்களது ஆயுதப் படைகள் முழு தயார் நிலையில் இருப்பதாக […]

உலகம் செய்தி

60 நாள் கெடுவை முடக்கிய தற்காலிக போர் நிறுத்தம்!

  • May 2, 2026
  • 0 Comments

“ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தமானது, போருக்கான நாடாளுமன்ற அனுமதியைப் பெறுவதற்கான 60 நாள் காலக்கெடுவை நிறுத்திவைக்கிறது.” இவ்வாறு அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் விளக்கமளித்துள்ளார். ஈரான்மீதான ராணுவ நடவடிக்கையை கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா ஆரம்பித்தது. போர் தொடுப்பதற்குரிய கட்டளையை பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும் அது தொடர்பில் 60 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். இதற்கமைய கடந்த மார்ச் 2 ஆம் திகதி இது தொடர்பில் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ட்ரம்ப் […]

உலகம் செய்தி

ஈரானின் நிபந்தனைகளை ஏற்க முடியாது: ட்ரம்ப் திட்டவட்டம்!

  • May 2, 2026
  • 0 Comments

அமைதி பேச்சுக்காக ஈரான் முன்மொழிந்துள்ள நிபந்தனைகளில் தனக்கு திருப்தி இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஈரான் அரசு திருத்தப்பட்ட புதிய நிபந்தனைகளை , பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிடம் தெரியப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், “ இரண்டு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உள்ளது. எனினும், போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் முன்மொழிந்துள்ள நிபந்தனைகள் ஏற்புடையவை அல்ல. அது […]

விளையாட்டு

டெல்லி அணி அபார வெற்றி!

  • May 2, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் Delhi Capitals அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய Rajasthan Royals அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (4) மற்றும் யஷஸ்வி ஜெய்சவால் (6) ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். எனினும், அணித் தலைவர் ரியான் பராக் (90 ஓட்டங்கள், 50 பந்துகள்) மற்றும் துருவ் ஜூரெல் […]

இலங்கை செய்தி

“போலிச்சண்டியர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்”

  • May 2, 2026
  • 0 Comments

“வடக்கிலும் தையிட்டிப் பிரச்சினை போன்று வேறு பல பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளை வைத்துக் கொண்டே வடக்கில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்கள் அரசியலை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.” – என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் நெடுந்தூர பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:- “இலங்கையில் கடந்த கால ஆட்சியாளர்கள் உருவாக்கிய பிரச்சினைகள் […]

இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 3 எலும்புக்கூடுகள் அடையாளம்! அகழ்வுப் பணிகள் தீவிரம்!!

  • May 2, 2026
  • 0 Comments

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ஐந்தாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை, மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட மூன்று மனித எலும்புக்கூடுகளையும் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் சேர்த்து, இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனிதப் புதைகுழியில் மொத்தம் 244 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்டவற்றில் 240 மனித எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன […]

error: Content is protected !!