நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை - லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் , ரட்னகிரிய தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி இன்று (31) தோட்டத் தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளார். செய்தி

குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி பலி: மலையகத்தில் சோகம்

  • July 31, 2026
  • 0 Comments

நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் , ரட்னகிரிய தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி இன்று (31) தோட்டத் தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளார். லிந்துலை, லிப்பகலை தோட்டத்தைச் சேர்ந்த முத்து நாராயணசாமி (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாமஸ்டன் ரட்னகரிய தோட்டத்தில், தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக […]

ஜப்பானின் தெற்கு நகரமான குமாமோட்டோவுக்கு அருகே ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் செய்தி

ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு

  • July 31, 2026
  • 0 Comments

தென்மேற்கு ஜப்பானைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-லிருந்து 34 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குமமோட்டோ (Kumamoto) மாகாண அரசு வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தியதோடு, மேலும் ஆறு பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை உகி (Uki) நகரத்திற்கு அருகில் ஏற்பட்ட ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாகச் சுமார் 40,000 வீடுகளுக்கான மின்சாரம் தடைபட்டது, இரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன, மேலும் ஜப்பானின் தெற்குத் தீவான கியூஷுவின் (Kyushu) […]

மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையையோ அரசு ஒருபோதும் தடுக்கவில்லை என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

மக்களின் போராட்ட உரிமையை அரசு பறிக்கவில்லை

  • July 31, 2026
  • 0 Comments

மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையையோ அரசு ஒருபோதும் தடுக்கவில்லை என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். அரசு ஜனநாயக வழியில் முன்னோக்கிச் செல்வதற்கு இத்தகைய ஆரோக்கியமான விமர்சனங்களும் சுட்டிக்காட்டல்களும் அவசியமானவை என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், “சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும் நீதித்துறையைப் பலப்படுத்தவுமே மக்கள் தெளிவான ஆணையை வழங்கினர். கடந்த காலங்களில் அரசியல் தலையீடுகளால் பாதிக்கப்பட்டிருந்த […]

அமெரிக்காவின் மின்னிசோட்டா (Minnesota) மாநிலத்தில் உள்ள பல உள்ளூர் குடிநீர் விநியோக அமைப்புகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்கள், ஈரானுடன் தொடர்புடைய ஒரு ஹேக்கர் குழுவின் வேலை என்பதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகம் செய்தி

அமெரிக்காவில் குடிநீர் சேவை முடக்கம்: பின்னணியில் ஈரான்?

  • July 31, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் மின்னிசோட்டா (Minnesota) மாநிலத்தில் உள்ள பல உள்ளூர் குடிநீர் விநியோக அமைப்புகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்கள், ஈரானுடன் தொடர்புடைய ஒரு ஹேக்கர் குழுவின் வேலை என்பதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு நிறுவனம் மற்றும் அமெரிக்க புலனாய்வாளர்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள தகவல்களின்படி, உள்ளூர் நேரப்படி ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் சுமார் 30 குடிநீர் அமைப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் முறையானது ஈரானின்ஆதரவு பெற்ற ஒரு […]

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சுயாதீன சர்வதேச விசாரணை உள்ளிட்ட ஏழு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க நீதி சமாதான ஆணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்குக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி குறித்து ஐ.நாவுக்கு அவசரக் கடிதம்

  • July 31, 2026
  • 0 Comments

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சுயாதீன சர்வதேச விசாரணை உள்ளிட்ட ஏழு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க நீதி சமாதான ஆணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்குக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 2025 பெப்ரவரியில் கண்டறியப்பட்ட இந்த இடத்தில், சிசுக்கள் மற்றும் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உட்பட 454-க்கும் மேற்பட்ட எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்நாட்டுப் பொறிமுறைகளில் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளதால், ‘மினசோட்டா நெறிமுறைக்கு’ அமைவாக சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் அகழ்வு மற்றும் மரபணு […]

ஆஸ்திரேலியாவில் முன்னாள் ராணுவ வீரர்களின் (Veterans) நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம் அடுத்த வாரம் முதல் முறையாகச் செயல்படத் தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் முன்னாள் படையினருக்கு சிறப்பு நீதிமன்றம் ஸ்தாபிப்பு

  • July 31, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் முன்னாள் ராணுவ வீரர்களின் (Veterans) நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம் அடுத்த வாரம் முதல் முறையாகச் செயல்படத் தொடங்கவுள்ளது. “உயிரைக் காக்கும் முயற்சி” என ஆதரவாளர்களால் வர்ணிக்கப்படும் இந்தத் திட்டம், தகுதியான முன்னாள் வீரர்களுக்குத் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அவர்களுக்குத் தேவையான மறுவாழ்வு மற்றும் ஆதரவு சேவைகளை வழங்கிட உதவும் ஒரு சிறப்பு சிகிச்சைமுறை நீதிமன்றமாக (Therapeutic Court) இயங்கும். ‘தடயவியல் மற்றும் பாதுகாப்புப் படையினர் தற்கொலை தொடர்பான அமைக்கப்பட்ட அரச ஆணையத்தின்’ (Royal […]

மொராக்கோவிலிருந்து கடல் மற்றும் தரை வழியே நூற்றுக்கணக்கான குடியேறிகள் ஸ்பெயினுக்குச் சொந்தமான 'செயுத்தா' (Ceuta) பிராந்தியத்திற்குள் நுழைய முயன்றதால், காவல்துறையினருக்கு உதவ ஸ்பெயின் அரசு இராணுவப் படைகளைக் களமிறக்கியுள்ளது. உலகம் செய்தி

படையெடுத்துவரும் குடியேறிகள்: இராணுவத்தைக் களமிறக்கியது ஸ்பெயின்

  • July 31, 2026
  • 0 Comments

மொராக்கோவிலிருந்து கடல் மற்றும் தரை வழியே நூற்றுக்கணக்கான குடியேறிகள் ஸ்பெயினுக்குச் சொந்தமான ‘செயுத்தா’ (Ceuta) பிராந்தியத்திற்குள் நுழைய முயன்றதால், காவல்துறையினருக்கு உதவ ஸ்பெயின் அரசு இராணுவப் படைகளைக் களமிறக்கியுள்ளது. அதேவேளையில், அருகில் உள்ள மற்றொரு ஸ்பெயின் பிராந்தியத்தையும் மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வியாழக்கிழமையன்று மட்டும் சுமார் 2,000 முதல் 3,000 பேர் வரை செயுத்தாவிற்குள் நுழைந்துள்ளதாக ஸ்பெயின் நாட்டின் அரசுத் தொலைக்காட்சியான TVE செய்தி வெளியிட்டுள்ளது. வெளியான வீடியோ காட்சிகளில், மொராக்கோ பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான […]

எகிப்து தலைநகர் கெய்ரோவில் மத்தியஸ்தர்களுக்கும் ஹமாஸ் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை, காசாவில் கட்டம் கட்டமாக ஆயுதக் களைவு செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு வழிவகுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஆயுதக் களைவா? ராணுவ ஆக்கிரமிப்பா? – காசா அமைதி ஒப்பந்தத்தில் தொடரும் குழப்பங்கள்

  • July 31, 2026
  • 0 Comments

எகிப்து தலைநகர் கெய்ரோவில் மத்தியஸ்தர்களுக்கும் ஹமாஸ் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை, காசாவில் கட்டம் கட்டமாக ஆயுதக் களைவு செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு வழிவகுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது வெறும் ‘வரைவுத் திட்டம்’ (Draft) மட்டுமே என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தனது ஆயுதங்களை ஒப்படைக்கும் என்பதில் இஸ்ரேல் சந்தேகத்துடன் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “இன்று, அமைதி வாரியம் (Board of Peace) […]

FIFA உலகக் கோப்பையைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான முன்மொழிவு கைவிடப்படாவிட்டால், உலகக் கோப்பை உட்பட அனைத்து FIFA போட்டிகளையும் புறக்கணிக்க ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான (UEFA) தீர்மானித்துள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள் விளையாட்டு

FIFA போட்டிகளை புறக்கணிக்க ஐரோப்பா முடிவு

  • July 30, 2026
  • 0 Comments

FIFA உலகக் கோப்பையைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான முன்மொழிவு கைவிடப்படாவிட்டால், உலகக் கோப்பை உட்பட அனைத்து FIFA போட்டிகளையும் புறக்கணிக்க ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான (UEFA) தீர்மானித்துள்ளது. FIFA தலைவர் ஜியான்னி இன்பான்டினோவின் (Gianni Infantino) உலகக் கோப்பைப் பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்திற்கு UEFA வின் உறுப்பு சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அதற்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. தனியார் முதலீட்டாளர்களின் 20 சதவீத பங்களிப்புடன், 20 பில்லியன் டொலர் வணிக நடவடிக்கையாக உலகக் […]

பாலஸ்தீன ஆக்சன் (Palestine Action) அமைப்புமீதான தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அதன் இணை நிறுவனரான ஹுதா அம்மோரிக்கு (Huda Ammori) பிரித்தானியா உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஐரோப்பா செய்தி

பாலஸ்தீன ஆக்சன் அமைப்பு தடை: மேல்முறையீடு செய்ய பிரித்தானிய உச்ச நீதிமன்றம் அனுமதி

  • July 30, 2026
  • 0 Comments

பாலஸ்தீன ஆக்சன் (Palestine Action) அமைப்புமீதான தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அதன் இணை நிறுவனரான ஹுதா அம்மோரிக்கு (Huda Ammori) பிரித்தானியா உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நேரடிப் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இந்த அமைப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுத் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தடையை நீக்கக் கோரி அமைப்பின் இணை நிறுவனரான ஹுதா அம்மோரி சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த பெப்ரவரி மாதம், இந்தத் தடை […]