இத்தாலி கால்பந்து அணியின் புகழ்பெற்ற தற்காப்பு ஆட்டக்காரரும் (Defender), ஏசி மிலன் (AC Milan) அணியின் முன்னாள் தலைவருமான பிரான்கோ பரேசி (Franco Baresi) வெள்ளிக்கிழமை (31) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 66 ஆகும். செய்தி

கால்பந்து உலகின் மகத்தான தற்காப்பு ஆட்டக்காரர் Franco Baresi காலமானார்

  • July 31, 2026
  • 0 Comments

இத்தாலி கால்பந்து அணியின் புகழ்பெற்ற தற்காப்பு ஆட்டக்காரரும் (Defender), ஏசி மிலன் (AC Milan) அணியின் முன்னாள் தலைவருமான பிரான்கோ பரேசி (Franco Baresi) வெள்ளிக்கிழமை (31) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 66 ஆகும். தனது 20 ஆண்டுகாலப் தொழில்முறை கால்பந்து வாழ்க்கையையும் ஏசி மிலன் அணிக்காக மட்டுமே அர்ப்பணித்த அவரது மறைவை கிளப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனினும், அவரது இறப்பிற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. “ஏசி மிலனின் ஒட்டுமொத்த வரலாறும் கண்ணீரில் மூழ்கியுள்ளது” […]

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் போது, கடமையில் இருந்து தவறியது மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றங்களுக்காக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கு மரண தண்டனை

  • July 31, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் போது, கடமையில் இருந்து தவறியது மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றங்களுக்காக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நிரந்தர மேல்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, சற்று முன்னர் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு முன்னரே தகவல் கிடைத்திருந்த போதிலும், அந்த புலனாய்வுத் தகவல்களை பறக்கணித்து, பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு பூஜித ஜயசுந்தர நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என சட்டமா அதிபரினால் […]

சர்வதேச கால்பந்து சம்மேளனமான பீபாவின் (FIFA) உலகக்கோப்பை மற்றும் பிற முக்கிய தொடர்களின் பங்குகளை விற்பனை செய்ய அந்த அமைப்பு முன்வைத்துள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீபா தலைவர் ஜிஅன்னி இன்ஃபான்டினோவின் மூத்த ஆலோசகர் கார்லோஸ் கார்டிரோ (Carlos Cordeiro) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். செய்தி விளையாட்டு

4.2 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு: FIFA ஆலோசகர் ராஜினாமா

  • July 31, 2026
  • 0 Comments

சர்வதேச கால்பந்து சம்மேளனமான பீபாவின் (FIFA) உலகக்கோப்பை மற்றும் பிற முக்கிய தொடர்களின் பங்குகளை விற்பனை செய்ய அந்த அமைப்பு முன்வைத்துள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீபா தலைவர் ஜிஅன்னி இன்ஃபான்டினோவின் மூத்த ஆலோசகர் கார்லோஸ் கார்டிரோ (Carlos Cordeiro) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘FIFA பார்வர்ட் என்டர்பிரைஸ்’ (FFE) என்ற திட்டத்தின் கீழ் தனிநபர் முதலீடுகளை ஈர்ப்பதற்கான யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உடனடி அமலுக்கு வரும் வகையில் தனது ராஜினாமாவை […]

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்டம் செயலகத்துக்கு முன்பாக ஊடகவியலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை செய்தி

நீதி கோரி யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்

  • July 31, 2026
  • 0 Comments

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்டம் செயலகத்துக்கு முன்பாக ஊடகவியலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். இதற்கமைய, யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதி அமைச்சர் கலந்துகொள்ளவிருந்த நிலையிலேயே, ஊடகவியலாளர்கள் […]

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். இலங்கை செய்தி

வடக்கில் விரைவில் காணி விடுவிப்பு: பாதுகாப்பு பிரதி அமைச்சர் உறுதி

  • July 31, 2026
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வரவேற்புரையாற்றிய முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் […]

இலங்கை இராணுவத்தின் 26-வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். இலங்கை செய்தி

இலங்கையில் புதிய ராணுவ தளபதி நியமனம்

  • July 31, 2026
  • 0 Comments

இலங்கை இராணுவத்தின் 26-வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். இலங்கை இராணுவத்தின் 25-வது தளபதியாக பணியாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு முன்னர், நிலந்த பிரேமரத்ன இவ்வருடம் ஜூன் மாதம் முதல் இராணுவத்தின் தலைமை அதிகாரியாக (Chief of Staff) பணியாற்றி வந்தார். இலங்கை பீரங்கிப் படையணியின் (Sri Lanka Artillery) மூத்த அதிகாரியான இவர், […]

டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதிவிளாடிமிர் புடின் ஆகியோர் இந்தியாவிற்கு வருகை தர திட்டமிட்டுள்ளனர். இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

சீனா, ரஷ்ய ஜனாதிபதிகள் இந்தியா வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

  • July 31, 2026
  • 0 Comments

டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதிவிளாடிமிர் புடின் ஆகியோர் இந்தியாவிற்கு வருகை தர திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஆயத்தப் பணிகளில் இந்தியா ஈடுபட்டு வருவதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இந்த உயர்மட்ட வருகைகள் தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த திங்கள் ( 27) மற்றும் செவ்வாய்க்கிழமை ( 28 இந்திய வெளியுறவுச் செயலாளர் […]

செய்தி பொழுதுபோக்கு

பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி காலமானார்

  • July 31, 2026
  • 0 Comments

தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 6000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். 1938ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஜமுனா ராணி அவரது 7வது வயதில் ‘தியாகய்யா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக நுழைந்தார். குழந்தைத் தனமான குரலுக்கு சொந்தக்காரரான ஜமுனா தமிழில் 1952ல் […]

24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் நடைபெறவுள்ள 2027 ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான 12 (Host) நகரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உறுதி செய்துள்ளது. செய்தி விளையாட்டு

2027 ஒருநாள் உலகக்கோப்பை:12 மைதானங்களை உறுதி செய்தது ஐசிசி

  • July 31, 2026
  • 0 Comments

24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் நடைபெறவுள்ள 2027 ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான 12 (Host) நகரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உறுதி செய்துள்ளது. மொத்தம் நடைபெறவுள்ள 54 போட்டிகளில் பெரும்பாலான போட்டிகள் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க், செஞ்சுரியன், டர்பன், கெபர்ஹா, குகொம்போ சிட்டி, கேப் டவுன், பார்ல் மற்றும் புளோம் போன்டைன் ஆகிய எட்டு நகரங்களில் நடைபெறவுள்ளன. இறுதிப்போட்டி ‘வாண்டரர்ஸ்’ அல்லது ‘நியூலேண்ட்ஸ்’ மைதானத்தில் நடத்தப்படும். சிம்பாப்வேயின் ஹராரே, புலவாயோ மற்றும் விக்டோரியா […]

ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களம் முற்றாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் பொலிஸ் மீது தனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

ஸ்ரீலங்கா பொலிஸா, ஜே.வி.பி. பொலிஸா? நாமல் கடும் சீற்றம்

  • July 31, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களம் முற்றாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் பொலிஸ் மீது தனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். வழக்கு விசாரணையொன்றிற்காக நேற்று நீதிமன்றத்திற்கு வருகை தந்த அவர், நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீலங்கா பொலிஸ், இன்று ‘ஜே.வி.பி. பொலிஸாக’ மாற்றப்பட்டுள்ளது. பொலிஸார் சமர்ப்பிக்கும் […]