இலங்கை

பெல்லன்வில பகுதியில் துப்பாக்கிச்சூடு – நபர் ஒருவர் உயிரிழப்பு

  • July 25, 2026
  • 0 Comments

பெல்லன்வில பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் படுகாயம் அடைந்த நிலையில், களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப்பின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆழமான காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இலங்கையில் நாளுக்கு நாள் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 14 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

  • July 23, 2026
  • 0 Comments

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் அருகே இன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த விழா மண்டபத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

உலகம்

அரிசோனாவில் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் படுகாயம்

  • July 20, 2026
  • 0 Comments

அரிசோனாவின் (Arizona)  டக்சன் (Tucson) நகரின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள வணிகப் பகுதியில் நேற்று அதிகாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் சந்தேகநபர் உட்பட 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில், பொலிஸ் அதிகாரிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்டதாகவும், இதனைத் தொடர்ந்தே சம்பவ இடத்திற்கு சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது தாக்குதல்தாரியை எதிர்கொண்ட பொலிஸார் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது […]

இலங்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

  • July 19, 2026
  • 0 Comments

இந்த ஆண்டு இதுவரை 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பிலியந்தல மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த மொத்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

உலகம்

டொரண்டோவில் விழாவொன்றில் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு

  • July 12, 2026
  • 0 Comments

டொரண்டோவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் நால்வர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். லத்தீன் அமெரிக்க கலாச்சார விழா ஒன்று நடைபெற்று வந்த நிலையில், செயின்ட் கிளேர் அவென்யூ ( St Clair Avenue ) வெஸ்ட் மற்றும் ஆர்லிங்டன் அவென்யூ (West and Arlington Avenue) அருகே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இறந்தவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  காயமடைந்தவர்களின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]

உலகம்

கனடாவில் யூதர்கள் செறிந்து வாழும் பகுதியில் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி!

  • June 23, 2026
  • 0 Comments

கனடாவின் மொன்டிரியலில் திங்கட் கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். பெருமளவான யூதர்கள் வசிக்கும் பகுதியில் மேற்படி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர், பொதுமகன் மற்றும் தாக்குதல்தாரி உள்ளட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்சிச்சூட்டுக்கான காரணத்தை பொலிஸார் வெளியிடவில்லை. இருப்பினும் பிரெஞ்சு மொழி பொது ஒலிபரப்பு நிறுவனமான ரேடியோ கனடா, தாக்குதல்தாரியை “இன்செல்” சித்தாந்தத்துடன் தொடர்புடையவர் விவரித்துள்ளது. இன்செல் என்பதன் பொருள் “விருப்பமின்றி பிரம்மச்சரியத்தை […]

உலகம்

இங்கிலாந்தின் உலகக் கோப்பை பயிற்சி முகாமுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு!

  • June 8, 2026
  • 0 Comments

கொலம்பியா – மிசோரியில் (Missouri) உள்ள இங்கிலாந்தின் உலகக் கோப்பை பயிற்சி முகாமுக்கு அருகே நேற்று துப்பாக்கிச்சூட்டு  சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் ஏறக்குறைய 09 பேர் படுகாயம் அடைந்ததாகவும், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ஊழியர்கள்  புளோரிடாவில் உள்ள பயிற்சி முகாமில் இருந்தமையால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணத்தை அறிய பொலிஸார் தற்போது விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக […]

உலகம்

ஓஹியோவில் இடம்பெற்ற திருவிழாவில் துப்பாக்கிச்சூடு! 12 பேர் காயம்!

  • June 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள டோலிடோவ் பகுதியில் இடம்பெற்ற திருவிழாவில் பாரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. இதன்போது 12 பேர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் தாக்குதல்தாரியை தேடி வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான 10 பேர் நலமாக உள்ளதாகவும், 02 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் டோலிடோவ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளிடம் காவல்துறை பேசி வருவதாகவும், கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, தாக்குதல்தாரியை கைது செய்ய பொலிஸார் […]

இலங்கை

களுத்துறையில் துப்பாக்கிச்சூடு!

  • May 28, 2026
  • 0 Comments

களுத்துறை, பள்ளிவாசல் வீதிக்கு அருகில்  துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து, காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம்  மேற்கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக தற்போது மூன்று பொலிஸ் […]

உலகம்

ஓக்லஹோமாவில் விருந்து நிகழ்வொன்றில் துப்பாக்கிச்சூடு – பலர் படுகாயம்!

  • May 4, 2026
  • 0 Comments

ஓக்லஹோமாவின் (Oklahoma) ஆர்கேடியா (Arcadia) ஏரிக்கு அருகில் நேற்று  நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “இளைஞர்கள்” கலந்துகொண்ட விருந்து நிகழ்வொன்றிலேயே மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவம்  இடம்பெற்றுள்ளது. முகமூடி அணித்த  இரண்டு நபர்கள்” துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆனால் இதுவரை எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை. காயமடைந்தவர்கள் ஓக்லஹோமா சிட்டி மற்றும் எட்மண்டில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண்பதற்காக,   கேமராக்களின் காட்சிகளை […]