உலகம்

இங்கிலாந்தின் உலகக் கோப்பை பயிற்சி முகாமுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு!

  • June 8, 2026
  • 0 Comments

கொலம்பியா – மிசோரியில் (Missouri) உள்ள இங்கிலாந்தின் உலகக் கோப்பை பயிற்சி முகாமுக்கு அருகே நேற்று துப்பாக்கிச்சூட்டு  சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் ஏறக்குறைய 09 பேர் படுகாயம் அடைந்ததாகவும், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ஊழியர்கள்  புளோரிடாவில் உள்ள பயிற்சி முகாமில் இருந்தமையால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணத்தை அறிய பொலிஸார் தற்போது விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக […]

உலகம்

ஓஹியோவில் இடம்பெற்ற திருவிழாவில் துப்பாக்கிச்சூடு! 12 பேர் காயம்!

  • June 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள டோலிடோவ் பகுதியில் இடம்பெற்ற திருவிழாவில் பாரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. இதன்போது 12 பேர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் தாக்குதல்தாரியை தேடி வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான 10 பேர் நலமாக உள்ளதாகவும், 02 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் டோலிடோவ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளிடம் காவல்துறை பேசி வருவதாகவும், கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, தாக்குதல்தாரியை கைது செய்ய பொலிஸார் […]

இலங்கை

களுத்துறையில் துப்பாக்கிச்சூடு!

  • May 28, 2026
  • 0 Comments

களுத்துறை, பள்ளிவாசல் வீதிக்கு அருகில்  துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து, காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம்  மேற்கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக தற்போது மூன்று பொலிஸ் […]

உலகம்

ஓக்லஹோமாவில் விருந்து நிகழ்வொன்றில் துப்பாக்கிச்சூடு – பலர் படுகாயம்!

  • May 4, 2026
  • 0 Comments

ஓக்லஹோமாவின் (Oklahoma) ஆர்கேடியா (Arcadia) ஏரிக்கு அருகில் நேற்று  நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “இளைஞர்கள்” கலந்துகொண்ட விருந்து நிகழ்வொன்றிலேயே மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவம்  இடம்பெற்றுள்ளது. முகமூடி அணித்த  இரண்டு நபர்கள்” துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆனால் இதுவரை எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை. காயமடைந்தவர்கள் ஓக்லஹோமா சிட்டி மற்றும் எட்மண்டில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண்பதற்காக,   கேமராக்களின் காட்சிகளை […]

ஐரோப்பா

லண்டனில் துப்பாக்கிச்சூடு – உயிருக்கு போராடும் இளைஞர்!

  • May 3, 2026
  • 0 Comments

லண்டனின் பிரிக்ஸ்டனில் நேற்று இடம்பெற்ற   துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன்  மேலும் மூவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோல்ட்ஹார்பர் (Coldharbour) லேனில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்தில் முதலுதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணும் பணியில் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

உலகம் செய்தி

வெள்ளை மாளிளை துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்

  • April 27, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர் இரவு விருந்தின் போது இடம்பெற்ற  துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சந்தேக நபர், கலிபோர்னியா (California) மாநிலத்தின் டொரன்ஸ் (Torrance) பகுதியைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் (Cole Thomas Allen) என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ட்ரம்ப் (Trump) நிர்வாக உறுப்பினர்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதென அமெரிக்க அட்டர்னி ஜெனரல் (Attorney General) டாட் […]

உலகம்

சிகாகோவில் உள்ள மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு!!

  • April 26, 2026
  • 0 Comments

சிகாகோவில்  மருத்துவமனை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிகாகோவில் உள்ள எண்டெவர் ஹெல்த் ஸ்வீடிஷ் ( Endeavor Health Swedish) மருத்துவமனையில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் ஒருவரைக் கண்காணிப்பிற்காக அழைத்துச் சென்றபோது, ​​சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிகாகோ மேயர் பிராண்டன் […]

உலகம் செய்தி

வெள்ளை மாளிகையில் பாதுகாப்பான மண்டபம் இருந்திருந்தால் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்காது

  • April 26, 2026
  • 0 Comments

வெள்ளை மாளிகையில் தற்போது கட்டப்பட்டு வரும் மிக உயர்தர பாதுகாப்பு வசதிகள் கொண்ட மண்டபம் இருந்திருந்தால், சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், கடந்த 150 ஆண்டுகளாக இராணுவமும் பல ஜனாதிபதிகளும், வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் பெரிய மற்றும் பாதுகாப்பான மண்டபம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், தற்போது கட்டப்பட்டு வரும் அந்த மண்டபத்தில் உயர் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு – சிறுவர்கள் பலி!

  • October 5, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் இரு சிறுவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 04 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 34 வயதான கெரியன் ரஷாத் ஜோன்ஸ் என்பவர் சந்தேகத்தின்பேரில் கைது  செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்பட ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளதாக […]

ஐரோப்பா

ஸ்வீடனில் துப்பாக்கிச்சூடு – 06 பேர் படுகாயம் !

  • October 4, 2025
  • 0 Comments

ஸ்வீடனின்  Gävle என்ற நகரில்  இன்று  இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 06 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் 14 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உணவகங்கள், மதுபான கூடங்கள் நிறைந்த பரபரப்பான சாலையில் இந்த  துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 18 வயதிற்கு உட்பட்ட 06 இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளதுடன்,  அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு  செல்லப்பட்டுள்ளதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதல்தாரியான 14 வயது சிறுவன்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், […]