ஓக்லஹோமாவில் விருந்து நிகழ்வொன்றில் துப்பாக்கிச்சூடு – பலர் படுகாயம்!
ஓக்லஹோமாவின் (Oklahoma) ஆர்கேடியா (Arcadia) ஏரிக்கு அருகில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“இளைஞர்கள்” கலந்துகொண்ட விருந்து நிகழ்வொன்றிலேயே மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகமூடி அணித்த இரண்டு நபர்கள்” துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை.
காயமடைந்தவர்கள் ஓக்லஹோமா சிட்டி மற்றும் எட்மண்டில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண்பதற்காக, கேமராக்களின் காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பொதுமக்களுக்குத் தற்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.





