“அமெரிக்க தாக்குதலில் ஈரான் நிலைகுலைந்துவிட்டது” – ட்ரம்ப் கர்ஜனை
ஈரானுக்கு எதிரான போர் மிகவும் சாதகமாக நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தும் இந்தத் தாக்குதல்களில் அமெரிக்கப் படைகள் ஈரானை கடுமையாக வீழ்த்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் தொடர் வெற்றிகள் ஈரானை நிலைகுலையச் செய்துள்ளதாகவும், இறுதியில் அவர்கள் பின்வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈரான் தனது படைகளைத் திரும்பப் பெறும் வரை அமெரிக்கா தனது வெற்றிப் பயணத்தைத் தொடரும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.




