உலகம்

நோர்வேயில் காட்டுத்தீ பரவல் – 100 வீடுகள் தீக்கிரை

  • July 18, 2026
  • 0 Comments

நோர்வேயில் உள்ள டிராம்மன்  (Drammen) நகருக்கு அருகே நேற்று பாரிய காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் சுமார் 100 வீடுகள் தீக்கரையானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓஸ்லோவிலிருந்து சுமார் 50 கி.மீ (30 மைல்) தொலைவில் மேற்கே அமைந்துள்ள அப்பகுதியை அடர்த்தியான கருப்புப் புகை சூழ்ந்திருப்பதை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள காணொளிகள் புலப்படுத்துகின்றன. இருப்பினும் மேற்படி காட்டுத்தீயினால் உயிர் இழப்புகள் ஏற்படவில்லை என மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். அறுபதிற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், தீயை […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

லண்டன் மீது ஏவுகணை தாக்குதல் : நோர்வே வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்!

  • June 2, 2026
  • 0 Comments

ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை கைப்பற்ற ரஷ்யா போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பகுதி கைப்பற்றப்பட்டால், லண்டன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கான அனைத்து சாத்தியமான வாய்ப்புகளும் உள்ளதாக நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார். நோர்வேயின் பிரதான நிலப்பரப்பிற்கும் ஸ்வால்பார்ட் (Svalbard) தீவுக்கூட்டத்திற்கும் இடையே உள்ள சுமார் 400 மைல் அகலமுள்ள பகுதியை கைப்பற்ற ரஷ்யா தயாராகி வருவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் முகாமிட்டுள்ள ரஷ்யாவின் சக்திவாய்ந்த வடக்குக் […]

உலகம்

சமூக ஊடகத் தடை – நோர்வேயில் புதிய சட்டம்!

  • April 25, 2026
  • 0 Comments

குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையை அறிவித்த சமீபத்திய நாடாக நார்வே மாறியுள்ளது. 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக வலைத்தளங்களைத் தடை செய்யும் சட்டமூலத்தை இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், பயனர்களின் வயதைச் சரிபார்க்கும் பொறுப்பு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளிியிட்டுள்ள அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் (Jonas Gahr Store),  குழந்தைகள் குழந்தைகளாக இருக்கக்கூடிய ஒரு குழந்தைப் பருவத்தை நாங்கள் விரும்புவதால், இந்தச் […]

இலங்கை உலகம்

நோர்வே நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்து விவாதம்

  • February 26, 2026
  • 0 Comments

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் (Stortinget) இன்று (26) விவாதம் நடைபெறவுள்ளது. நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரத்னம் முன்வைத்துள்ள பிரேரணைக்கு அமைவாக இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. இதேவேளை, இதன்போது எழுப்பப்படும் கேள்விகளுக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.