ஐரோப்பா

இளவரசி டயானாவின் பழிவாங்கும் உடை ஏலத்திற்கு வருகிறது

மறைந்த இளவரசி டயானா 1994-ல் அணிந்திருந்த “பழிவாங்கும் உடை”, கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு முதன்முறையாக சோதேபிஸ் ஏல நிறுவனத்தில் ஏலத்திற்கு வந்துள்ளது.

கிரேக்க வடிவமைப்பாளர் கிறிஸ்டினா ஸ்டாம்போலியன் வடிவமைத்த இந்த உடை டிசம்பர் 9 அன்று விற்பனைக்கு வரும்.

இவ் உடையானது £220,000 (S$377,050) வரை விலை பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

1994 ஜூன் மாதம், நிதி திரட்டும் இரவு விருந்திற்காக லண்டனில் உள்ள செர்பன்டைன் கேலரிக்கு வந்தபோது டயானா இந்த உடையை அணிந்திருந்தார்.

இந்த உடை இதற்கு முன்னர் 1997-ல் ஏலத்தில் விற்கப்பட்டதாக சோதேபிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது, ஆனால் அது குறித்த மேலதிக விவரங்களை அளிக்கவில்லை.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்