ரஷ்​யா​விடம் இருந்து மேலும் ஐந்து எஸ்-400 ஏவுகணை​களை கொள்வனவு செய்ய இந்தியா திட்​ட​மிட்டு உள்​ளது. இந்தியா செய்தி

ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம்

  • September 1, 2026
  • 0 Comments

ரஷ்​யா​விடம் இருந்து மேலும் ஐந்து எஸ்-400 ஏவுகணை​களை கொள்வனவு செய்ய இந்தியா திட்​ட​மிட்டு உள்​ளது. ரஷ்யாவின் எஸ் – 400 ஏவு​கணை​கள் உலகின் வலிமை​யான, அதிநவீன ஏவு​கணை​யாக கருதப்​படு​கிறது. கடந்த 2018-ம் ஆண்டில் ரஷ்​யா​விடம் இருந்து ரூ.51,838 கோடியில் ​ (இந்திய நாணய மதிப்பு) ஐந்து எஸ் – 400 ஏவு​கணை​களை வாங்க இந்​தியா ஒப்​பந்​தம் செய்​தது. இதன்​படி மூன்று ஏவு​கணை​களை ரஷ்யா விநி​யோகம் செய்துள்ளது. மீத​முள்ள இரு ஏவு​கணை வரும் நவம்​பரில் இந்தியாவிடம் ஒப்​படைக்​கப்​படும் என்று […]

நேபாளத்துக்கு நிதி உதவி வழங்க அமைச்சரவை அனுமதி இலங்கை செய்தி

நேபாளத்துக்கு நிதி உதவி வழங்க அமைச்சரவை அனுமதி

  • September 1, 2026
  • 0 Comments

கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் நிவாரணப் பணிகளைச் செயற்படுத்துவதற்காக 1 மில்லியன் அமெரிக்க அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் இதற்குரிய யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு நேபாளத்தில் றசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான திடீர் வெள்ள நிலைமையால் அதிகமானவர்கள் உயிரிழந்து அதிகளவான சொத்துக்களும் அழிவடைந்துள்ளன. இவ் இடர் நிலைமையின் மோசமான தன்மையால் நேபாள அரசுக்கும் மற்றும் மக்களுக்கு குறிப்பிடத்தக்களவு மனிதாபிமான சுமை […]

ஈரான்மீது கடுமையான பொருளாதார நடவடிக்கை: பிரான்ஸ் எச்சரிக்கை ஐரோப்பா செய்தி

ஈரான்மீது கடுமையான பொருளாதார நடவடிக்கை: பிரான்ஸ் எச்சரிக்கை

  • September 1, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு பிரான்ஸ் விரும்புவதாக அந்நாட்டின் நிதியமைச்சர் ரோலண்ட் லெஸ்க்கூர் (Roland Lescure) தெரிவித்துள்ளார். Al Jazeera) செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஈரான் விவகாரத்தில் அமெரிக்க நிர்வாகத்துடனும் அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட்டுடனும் (Scott Bessent) இணைந்து அடுத்து என்ன நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து பிரான்ஸ் எனவும் அவர் கூறினார். பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியமும் பல ஆண்டுகளாக ஈரான் மீது கடுமையான […]

நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1,000-ஐத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நேபாளம் வெள்ளம்: 1000 ஐ கடந்தது பலி எண்ணிக்கை

  • September 1, 2026
  • 0 Comments

நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1,000-ஐத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேபாளத்தில் மட்டும் 987 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 583 வெளிநாட்டவர்கள் உட்பட 3,916 பேரைக் காணவில்லை என்றும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. அதேவேளையில், சீனா வெளியிட்ட தகவலின்படி 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 261 வெளிநாட்டவர்கள் உட்பட 546 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள […]

போரை முடிவுக்கு கொண்டுவருமாறு புடினிடம் மோடி கோரிக்கை இந்தியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

போரை முடிவுக்கு கொண்டுவருமாறு புடினிடம் மோடி கோரிக்கை

  • September 1, 2026
  • 0 Comments

உக்ரைனில் நடைபெற்று வரும் போர் மனிதநேயத்தின் அடிப்படையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், போரை நிறுத்துவதற்கான அனைத்து அமைதி முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ (SCO) உச்சி மாநாட்டின் இடையே, ஜனாதிபதி புடினுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் பிரதமர் மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதற்காக மேலைநாடுகள் […]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும் நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்தியா உலகம் செய்தி

இந்திய பிரதமர், ஈரான் ஜனாதிபதி நேரடி சந்திப்பு

  • September 1, 2026
  • 0 Comments

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும் நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டுக்கு இணையாகவே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், இவ்விரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறையாகும். இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான சமீபத்திய உறவுகள் குறித்து ஆய்வு செய்த தலைவர்கள், கூட்டு ஒத்துழைப்பை மேலும் […]

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல்வர் விஜய் பிரித்தானியா செல்லவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா செய்தி தமிழ்நாடு

10 ஆம் திகதி பிரித்தானியா வருகிறார் முதல்வர் விஜய்

  • September 1, 2026
  • 0 Comments

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல்வர் விஜய் பிரித்தானியா செல்லவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அவரது முதல் வெளிநாட்டு பயணமாக இது அமைந்துள்ளது. தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு. கடந்த மாதம் சென்னையில் ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு – 2026’ நடைபெற்றது. முதல்வர் விஜய் தலைமையிலான இந்த […]

இலங்கையின் பணவீக்கம் 8 சதவீதமாக அதிகரிப்பு இலங்கை செய்தி

இலங்கையின் பணவீக்கம் 8 சதவீதமாக அதிகரிப்பு

  • September 1, 2026
  • 0 Comments

இலங்கையில் கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) அடிப்படையிலான பணவீக்கம், ஓகஸ்ட் மாதத்தில் 8% ஆக உயர்ந்து, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. ஜூலை மாதத்தில் 7.3% ஆக இருந்த பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் 0.7%வீதத்தினால் உயர்ந்துள்ளது. உணவுப் பணவீக்கத்தில் ஏற்பட்ட விளைவே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று மத்திய வங்கி கூறியுள்ளது. உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.3% ஆக இருந்த நிலையில் இருந்து, ஓகஸ்ட் மாதத்தில் 8.5% ஆக உயர்ந்துள்ளது. இதுவே […]

சிட்னியில் பயங்கரவாதத் தாக்குதல் திட்டம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட சிறுவன் ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னியில் பயங்கரவாதத் தாக்குதல் திட்டம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட சிறுவன்

  • September 1, 2026
  • 0 Comments

சமூக வலைதளங்கள் மூலம் தீவிரவாதக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, சிட்னியின் முக்கிய மையப்பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதை சிறுவர் ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2024 ஆகஸ்ட் மாதம், மேற்கு சிட்னியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கூட்டாட்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது அச்சிறுவனுக்கு 14 வயது. அவரது கணினியில் தீவிரவாதக் கருத்துக்கள் அடங்கிய 40-க்கும் மேற்பட்ட காணொளிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெயர் வெளியிடப்படாத அச்சிறுவன், செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற தண்டனை விவரங்கள் மீதான […]

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்சேத்துடனான பல மாத கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, அமெரிக்க ராணுவச் செயலர் டான் டிரிஸ்கோல் தனது ராஜினாமா கடிதத்தை வெள்ளை மாளிகைக்கு அனுப்பியுள்ளார் என தெரியவருகின்றது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்க ராணுவ செயலாளர் ராஜினாமா

  • September 1, 2026
  • 0 Comments

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்சேத்துடனான பல மாத கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, அமெரிக்க ராணுவச் செயலர் டான் டிரிஸ்கோல் தனது ராஜினாமா கடிதத்தை வெள்ளை மாளிகைக்கு அனுப்பியுள்ளார் என தெரியவருகின்றது. துணை ஜனாதிபதி ஜே.டி.வேன்ஸுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் டிரிஸ்கோல், ஹெக்சேத்தின் தலைமையின் கீழ் பென்டகனில் இருந்து நீக்கப்பட்ட அல்லது பதவியை இழந்த முன்னணி அதிகாரிகளின் வரிசையில் தற்போது இணைந்துள்ளார். மத்திய கிழக்கில் ஆயிரக்கணக்கான அமெரிக்க ராணுவ வீரர்கள் போரில் ஈடுபட்டுள்ள சூழலில், ஈரான் உடனான போர் […]