செய்தி

BSP கட்சியிலிருந்து அகாஷ் ஆனந்த் நீக்கம்: மாயாவதி அதிரடி நடவடிக்கை

பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து தனது மருமகன் அகாஷ் ஆனந்தை விடுவித்த சில நாட்களிலேயே, அவரை கட்சியிலிருந்தும் முழுமையாக விடுவிப்பதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி அறிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து தனது மருமகன் அகாஷ் ஆனந்தை விடுவித்த சில நாட்களிலேயே, அவரை கட்சியிலிருந்தும் முழுமையாக விடுவிப்பதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி அறிவித்துள்ளார்.

அகாஷ் ஆனந்தின் மாமனாரும் முன்னாள் மூத்த தலைவருமான அசோக் சித்தார்த் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அசோக் சித்தார்த் அரசியலிலிருந்து விலகினால் மட்டுமே அகாஷ் ஆனந்தின் அரசியல் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று மாயாவதி முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், மாயாவதியின் இந்த கருத்தை அகாஷ் ஆனந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிரவோ ஆதரவு தெரிவிக்கவோ இல்லை.

அகாஷ் ஆனந்த் கட்சியின் நலனை விடக் குடும்ப உறவுகளுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும், இரட்டை மனநிலையுடன் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டிய மாயாவதி, அவரை பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து முற்றிலுமாக விடுவிப்பதாகத் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி