இலங்கை செய்தி

இலங்கையின் பணவீக்கம் 8 சதவீதமாக அதிகரிப்பு

இலங்கையின் பணவீக்கம் 8 சதவீதமாக அதிகரிப்பு

இலங்கையில் கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) அடிப்படையிலான பணவீக்கம், ஓகஸ்ட் மாதத்தில் 8% ஆக உயர்ந்து, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.

ஜூலை மாதத்தில் 7.3% ஆக இருந்த பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் 0.7%வீதத்தினால் உயர்ந்துள்ளது.

உணவுப் பணவீக்கத்தில் ஏற்பட்ட விளைவே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று மத்திய வங்கி கூறியுள்ளது.

உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.3% ஆக இருந்த நிலையில் இருந்து, ஓகஸ்ட் மாதத்தில் 8.5% ஆக உயர்ந்துள்ளது. இதுவே ஒட்டுமொத்த பணவீக்க உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

அதே நேரத்தில், உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம் 7.8% இலிருந்து 7.7% ஆக சிறிதளவு குறைந்ததுள்ளது.

பணவீக்கத்தை 5% இற்குள் கட்டுப்படுத்தும் மத்திய வங்கியின் இலக்கை மீறி கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை