“புலிகளின் சரணடைவு குறித்து ராஜபக்சக்களே முயற்சி செய்தனர்” – பொன்சேகா பரபரப்பு தகவல்
“புலிகளை முற்றாக அழித்துத் துடைத்தெறிய வேண்டும் என்பதே எனது வியூகமாக இருந்தது. ஆனாலும் சரணடைவு குறித்து ராஜபக்சக்களே பேச்சுவார்த்தை நடத்தினர்” என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு: “இராணுவத் தளபதியான எனக்குத் தெரியாமல், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றுடன் ராஜபக்சக்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எரிக் சொல்ஹைமுடனும் கலந்துரையாடினார்கள். புலிகளின் சரணடைவு பற்றியே அவர்கள் பேசியுள்ளனர். புலிகளை முற்றாக ஒழிப்பதே எனது […]













