பெர்முடா முக்கோணத்திற்கு அருகில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டுப்பிடிப்பு
பெர்முடா முக்கோணத்திற்கு அருகில் ஏழு மைல் நீளமுள்ள ‘மூழ்கிய நகரம்’ ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
யூஎஃப்ஓ (UFO) ஆராய்ச்சியாளரான ஸ்காட் சி. வாரிங் (Scott C Waring), கியூபா மற்றும் ஹைட்டிக்கு அருகில் இந்த வடிவங்களைக் கண்டறிந்துள்ளார்.
இவை பண்டைய மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நகரத்தின் எச்சங்களாக இருக்கலாம் என்று அவர் வாதிடுகிறார்.

சீபெட் 2030′ (Seabed 2030) திட்டத்தின் இணையவழி வரைபடத்தைப் பயன்படுத்தி வாரிங் இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளார். இத்திட்டம் தற்போதைய பத்தாண்டுகளின் இறுதிக்குள் முழு கடல் தரையையும் வரைபடமாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு உலகளாவிய முயற்சியாகும்.
இந்த இடம் ஒரு திசையில் ஏழு அல்லது எட்டு மைல்களும், மற்றொரு திசையில் சுமார் மூன்று மைல்களும் பரவியிருப்பதாக அவர் மதிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களோ அல்லது கடல்சார் விஞ்ஞானிகளோ இந்த இடத்தை ஆய்வு செய்யவோ அல்லது அந்த வடிவங்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட உண்மையான கட்டமைப்புகள் என்பதை உறுதிப்படுத்தவோ இல்லை.

ஆனால் வாரிங் இவை செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார். இவை பொதுவாக பண்டைய மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும், கடலுக்கு அடியில் மூழ்கிவிட்டதாகக் கூறப்படும் புகழ்பெற்ற நாகரிகமான ‘அட்லாண்டிஸ்’ (Atlantis) போன்ற ஒரு குடியிருப்புப் பகுதியின் எச்சங்களாக இந்த வடிவங்கள் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்தத் தீவின் நிலைத்தன்மையைக் குலைத்திருக்கலாம் என்றும், அதனால் பவளப்பாறையும் அதன் மீது கட்டப்பட்டிருந்த அனைத்தும் கடலுக்குள் சரிந்து விழுந்திருக்கலாம் என்றும் அவர் ஊகித்துள்ளார்.




