புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்
தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது மூப்பால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 90. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடியில், கடந்த 1936-ம் ஆண்டு பிறந்த சாலமன் பாப்பையா, பேராசியர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், எழுத்தாளர், நடிகர் போன்ற பன்முகத் தன்மை கொண்டவர். தமிழறிஞர், முத்தமிழறிஞர், சொல்வேந்தர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். வெள்ளித்திரையில், சிவாஜி, பாய்ஸ் உள்ளிட்டப் படங்களிலும் நடித்திருக்கிறார். திருக்குறள், கம்ப ராமாயணத்துக்கும் உரை எழுதியிருக்கிறார். […]













