நேட்டோ அமைப்புடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கை கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை செய்தி

நேட்டோ ராணுவ குழு தலைவருடன் பாதுகாப்பு செயலர் சந்திப்பு

  • September 2, 2026
  • 0 Comments

நேட்டோ அமைப்புடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கை கவனம் செலுத்தியுள்ளது. பாதுகாப்புத் தளபதிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இலங்கை பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, அதிகாரபூர்வ பயணமாக கனடா சென்றுள்ளார். அவர் விக்டோரியாவில் நடைபெற்ற பாதுகாப்பு தளபதிகள் மாநாட்டின் ஒரு பகுதியாக, நேட்டோ இராணுவக் குழுவின் தலைவர் அட்மிரல் கியூசெப்பே காவோ ட்ராகோனுடன் (Admiral Giuseppe Cavo Dragone) இருதரப்புப் பேச்சுக்களை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது, ​​இராணுவ தளவாடங்களை நவீனமயமாக்குதல், […]

யாழ். தெல்லிப்பளையில், வல்லை - அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை இனந்தெரியாதோர் இடித்துச் சேதமாக்கியுள்ளனர். இலங்கை செய்தி

யாழில் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி சேதம்

  • September 2, 2026
  • 0 Comments

யாழ். தெல்லிப்பளையில், வல்லை – அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை இனந்தெரியாதோர் இடித்துச் சேதமாக்கியுள்ளனர். தந்தை செல்வா குடும்பத்தவரது பரம்பரை இடுகாட்டில் இருந்த தூபியின் மேல் பகுதியே சூறையாடப்பட்டுள்ளது. போரின் பின்னர் தெல்லிப்பளை பிரதேசம் விடுவிக்கப்பட்டபோது அங்கு போரின் முன்னர் இருந்த தூபியை ஒத்த தூபி ஒன்று 2012 ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு அமைக்கப்பட்டது. இவ்வாறு புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த தந்தை செல்வாவின் தூபியே […]

இலங்கையில் கடும் வறட்சி: 88 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு இலங்கை செய்தி

இலங்கையில் கடும் வறட்சி: 88 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

  • September 2, 2026
  • 0 Comments

பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 6 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 27,475 குடும்பங்களைச் சேர்ந்த 88,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி காரணமாக அம்பாறை மாவட்டத்தில் 8,847 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28,523 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 37,890 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 3,926 பதுளை மாவட்டத்தில் 8,383 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த மாவட்டங்களில் உள்ள ஆறுகள், குளங்கள் […]

சீனாவுடன் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு: அமைச்சரவை ஒப்புதல் இலங்கை செய்தி

சீனாவுடன் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு: அமைச்சரவை ஒப்புதல்

  • September 2, 2026
  • 0 Comments

குடியேற்ற ஒழுங்குமுறை ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கையும் சீனாவும் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கும், சீனாவின் தேசிய குடியேற்ற நிர்வாகத்திற்கும் இடையில் இந்த உடன்பாடு, கையெழுத்திடப்படும். வணிகம், முதலீடு, சுற்றுலா, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் குடிமக்களின் பயணத்தை இலகுபடுத்துவது உட்பட, நுழைவிசைவுகள், குடியேற்றம் மற்றும் குடியகல்வு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், அதிகாரபூர்வ […]

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) இதுவரை பதிவான மிக மோசமான எபோலா (Ebola) நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில், செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. உலகம் செய்தி

எபோலா பரவலுக்கு மத்தியில் காங்கோவில் பாடசாலைகள் மீண்டும் திறப்பு

  • September 1, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) இதுவரை பதிவான மிக மோசமான எபோலா (Ebola) நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில், செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இது நோய்த் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்துரி (Ituri) மாகாணத்தில் உள்ள பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, ஆகஸ்ட் 31 ஆம் திகதி நிலவரப்படி 6,041 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களும் 2,911 மரணங்களும் பதிவாகியுள்ளன. இது 2018 முதல் 2020 வரை பரவிய முந்தைய […]

அமெரிக்கா, ஈரான் போர் நீடிக்குமென சர்வதேச சமூகம் அச்சம் உலகம் செய்தி

அமெரிக்கா, ஈரான் போர் நீடிக்குமென சர்வதேச சமூகம் அச்சம்

  • September 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் நிலவும் மோதல்களை நிறுத்துவது தொடர்பாகக் கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றினால், ஈரானும் அதற்குரிய முறையில் பதிலளிக்கும் என ஈரான் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இருப்பினும், ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளதால் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது. ஜூலை மாத பிற்பகுதிக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே முதன்முறையாக நேரடித் தாக்குதல்கள் பரிமாறப்பட்டதாலும், உலகளாவிய எண்ணெய் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையிலிருந்து வெளியேறிய […]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கியது முதல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை முதன்முறையாகச் சந்தித்துப் பேசிய ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், தங்கள் நாட்டிற்கு ரஷ்யா வழங்கி வரும் ஆதரவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். உலகம் செய்தி

ஈரானுக்கு ரஷ்யா துணை நிற்கும்: புடின் உறுதி

  • September 1, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கியது முதல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை முதன்முறையாகச் சந்தித்துப் பேசிய ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், தங்கள் நாட்டிற்கு ரஷ்யா வழங்கி வரும் ஆதரவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டின் இடையே இடம்பெற்ற இச்சந்திப்பின் போது உரையாற்றிய பெசெஷ்கியான், “போர் மற்றும் தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியிலும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அரங்குகளில் அமெரிக்கா எம்மீது தடைகளை விதித்த […]

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கை செய்தி

இலங்கைவந்த கையோடு ஜே.வி.பி. செயலரை சந்தித்தார் சீனத் தூதுவர்

  • September 1, 2026
  • 0 Comments

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில் நடந்த சந்திப்பின்போது, ​​இலங்கை-சீனா இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவது, அதிக சீன முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வறுமை ஒழிப்பில் ஒத்துழைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் முதலீட்டை அதிகரிக்க சீன முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும், வறுமை ஒழிப்பில் சீனாவின் அனுபவம் சிறிலங்காவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை […]

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

  • September 1, 2026
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக கண்டறியப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு ஏழு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், நீண்ட விசாரணைக்குப் பின்னர், கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி முகமட் மிஹால் இந்தத் தண்டனையை விதித்தார். 2014-ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மே தினப் பேரணியில் பங்கேற்ற அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக, அரசாங்கத்திற்குச் சொந்தமான சிறிலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் […]

பிள்ளையானுக்கு மறியல் நீடிப்பு: லண்டனிலுள்ள சந்தேகநபருக்கு பிடியாணை இலங்கை செய்தி

பிள்ளையானுக்கு மறியல் நீடிப்பு: லண்டனிலுள்ள சந்தேகநபருக்கு பிடியாணை

  • September 1, 2026
  • 0 Comments

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகிய மூவரும் சிறைச்சாலைகளில் இருந்து இணையவழி காணொளி […]