உலகம்

ஜப்பானின் நகரமொன்றில் அனைத்து தொடக்கப் பாடசாலைகளையும் மூட நடவடிக்கை!

  • June 8, 2026
  • 0 Comments

ஜப்பானிய நகரமான உட்சுனோமியாவில் (Utsunomiya) உள்ள அனைத்து தொடக்க பாடசாலைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் முதல் முறையாக கரடி ஒன்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஐந்து லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இருப்பினும் இதுவரை அக்கரடி பிடிபடவில்லை. கடைசியாக அந்த கரடி பாடசாலையொன்றுக்கு அருகில் காணப்பட்டதாக கூறப்பகிறது. இதனைத் தொடர்தே பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் முழுவதும் கரடித் தாக்குதல்கள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வரும் வேளையில் இந்தச் […]

உலகம்

ஜப்பானில் மின்விநியோகம் துண்டிப்பு : 9 பேர் பலி!

  • June 2, 2026
  • 0 Comments

ஜப்பானை தாக்கிய ஜாங்மி (Jangmi ) புயல் காரணமாக 09 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த புயல் காரணமாக பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் புயல் காரணமாக, கியூஷுவில் (Kyushu) உள்ள மியாசாகி (Miyazaki) நகரில்  கிட்டத்தட்ட 400,000 குடியிருப்பாளர்கள் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ஒகினாவாவைத் தாக்கிய குறித்த புயல் தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பல பகுதிகளில் பரவலான மழை பெய்யும் என்றும், பலத்த காற்று வீசக்கூடும் […]

உலகம்

சீனாவில் உணவகம் ஒன்றில் கத்தி குத்து தாக்குதல் – ஜப்பானிய பிரஜைகள் இருவர் காயம்!

  • May 20, 2026
  • 0 Comments

சீனா – ஷாங்காயில் (Shanghai) உள்ள உணவகம் ஒன்றில் நேற்று கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த  தாக்குதலில் இரண்டு ஜப்பானிய ஆண்களும் சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, தாக்குதல்தாரி 59 வயதுடையவர் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் மினோரு கிஹாரா (Minoru Kihara) சம்பவம் குறித்து சீன அரசாங்கத்திடம் விளக்கம் கோரியுள்ளார். இதேவேளை இந்த சம்பவம் குறித்த விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு! அவசரகால எச்சரிக்கை!!

  • May 15, 2026
  • 0 Comments

ஜப்பானின் மியாகி பிராந்தியத்தின் கடற்கரைக்கு அப்பால் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து, ஜப்பானிய அரசாங்கம் ஐந்து மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசரகால எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஜப்பானிய அதிகாரிகள், தங்களின் 1-7 வரையிலான தீவிர அளவுகோலில் இந்த நிலநடுக்கத்தை 05 இல் அடங்குவதாக வரையறுத்துள்ளனர். வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளபோதிலும், சுனாமிக்கான உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

உலகம்

ஜப்பானில் அதிகரிக்கும் கரடி தாக்குதல்கள் : ஓநாய் ரோபோக்களுக்கு பெருகும் ஆதரவு!

  • May 14, 2026
  • 0 Comments

ஜப்பானில் கரடிகளை விரட்டியடிக்க ரோபோக்களை பயன்படுத்த ஆதரவு பெருகி வருகிறது. இதற்கமைய காட்டு விலங்குகளை விரட்டுவதற்காக அனிமேட்ரானிக் ஓநாய்களை (animatronic wolves) ஓட்டா செய்கி நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது அந்த நிறுவனத்திற்கு இந்த வருடத்தின் இதுவரையான காலத்தில் மாத்திரம் 50 ஆர்டர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்நிலையில் அந்த சாதனத்தை விரைவாக வழங்குவதற்கு முடியாமல் திணறுவுதாக  அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். “நாங்கள் அவற்றை கையால் உருவாக்குகிறோம். எங்களால் இப்போது அவற்றை போதுமான வேகத்தில் உருவாக்க முடியவில்லை. எங்கள் வாடிக்கையாளர்களை […]

உலகம்

ஜப்பான் ரயில் பெட்டியில் தெளிக்கப்பட்ட மர்மப்பொருள் – பயணிகளுக்கு நேர்ந்த துயரம்!

  • May 11, 2026
  • 0 Comments

ஜப்பானில் ரயிலில் பயணித்த 10 பேர் திடீரென நோய்வாய்ப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த ரயிலில் அடையாளம் தெரியாத ஒரு பொருள் தெளிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்தே பயணிகள் நோய்வாய்ப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பயணிகள் விசித்திரமான வாசனை மற்றும் தொண்டை எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவற்றை எதிர்கொண்டதாக முறைப்பாடு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த ரயில்   கவாசாகி நிலையத்தில் அவசரமாக நிறுத்தப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பயணிகள் வெளியேற்றப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் […]

உலகம் செய்தி

வியட்நாமுடன் அழமான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாக ஜப்பான் பிரதமர் உறுதி

  • May 2, 2026
  • 0 Comments

ஜப்பானின் பிரதமர் சனே டகாயிச்சி (Sanae Takaichi), வியட்நாமுடன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக எரிசக்தி மற்றும் முக்கிய கனிமங்கள் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை ஹனோய் (Hanoi) நகரில், வியட்நாம் பிரதமர் லே மின் ஹங் (Le Minh Hung) உடனை ஜப்பான் பிரதமர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது உட்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் விண்வெளி ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய ஆறு […]

உலகம்

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • April 27, 2026
  • 0 Comments

ஜப்பானின் வடக்கு பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (27) அதிகாலை பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதனையும் விடுக்கவில்லை. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, ஜப்பானின் வடக்கு தீவான ஹோக்கைடோவில் உள்ள சரபெட்சு எனும் சிறிய நகரத்திற்கு மேற்கே 18 கிலோமீட்டர் […]

உலகம்

ஜப்பானில் தொடர்ந்து நான்காவது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ!

  • April 25, 2026
  • 0 Comments

ஜப்பானின் இவாத்தே மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்து நான்காவது நாளாக பற்றி எரிகிறது. இதன் காரணமாக 3000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தத் தீயால் , ஓட்சுச்சியின் (Otsuchi) இரண்டு மாவட்டங்களில் 730 ஹெக்டேயர் (1,800 ஏக்கர்) பரப்பளவு எரிந்து சாம்பலாகியுள்ளது. 1,300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், ஜப்பான் தற்காப்புப் படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீயணைப்பு பணிகளில்  ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. குடியிருப்பு உட்பட 08 கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், உயிரிழப்புகள் […]

உலகம் முக்கிய செய்திகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

  • April 20, 2026
  • 0 Comments

ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவாட் மாகாணம் மற்றும் ஹொக்கைடோ பகுதிகளில் 3 மீற்றர் உயரம் வரையிலான அலைகள் தாக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதுடன், அப்பகுதி மக்களை உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.