உலகம்

ஜப்பான் முழுவதும் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • September 7, 2026
  • 0 Comments

ஜப்பான் முழுவதும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஃபுகுஷிமா மாகாணத்தின் இவாக்கி பகுதியில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் கார் ஒன்று மூழ்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேநேரம் டோக்கியோவின் தெற்கே உள்ள நிஜிமாவில் Niijima, 24 மணி நேரத்திற்குள் 485 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜப்பான் வானிலை அலுவலகம் இசு தீவுத் தொடரின் சில பகுதிகளுக்கு மிக உயர்ந்த மண்சரிவு அபாய எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது. மேலும் கனமழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், […]

உலகம்

ஜப்பானில் நிலைநிறுத்தப்படும் டைஃபான் ஏவுகணை – ரஷ்யா கடும் எச்சரிக்கை

  • September 3, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஜப்பான் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சியை நடத்தவுள்ளன. இந்த பயிற்சியின்போது அமெரிக்காவின் டைஃபான் ஏவுகணை அமைப்பை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜப்பானின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ரஷ்யா கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளது. வொஷிங்டன் தனது இந்தோ-பசிபிக் நட்பு நாடுகளுடன் ராணுவ ஒத்துழைப்பை ஆழப்படுத்தி வரும் நிலையில், இது மாஸ்கோவிற்கும் டோக்கியோவிற்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஓரியண்ட் ஷீல்ட் Orient Shield exercises பயிற்சிகளின் போது அமெரிக்க டைஃபான் ஏவுகணை ஏவுதளங்களை […]

உலகம்

ஜப்பானில் தண்டவாளத்தில் பணிப்புரிந்தவர்கள் மீது அதிவேக ரயில்மோதி விபத்து

  • August 20, 2026
  • 0 Comments

ஜப்பானில் ரயில் தண்டவாளத்தில் களைகளைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேர் அதிகவே ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் இன்று டோக்கியோவிற்கு வடக்கே உள்ள ஷின்-கனுமா Shin-Kanuma ரயில்  நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. டோக்கியோ நோக்கிச் சென்ற ஸ்பேசியா அதிவேக ரயில் மோதியே இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதேநேரம் குறித்த நேரத்தில் பணியில் இருந்த மேலும் ஆறுபேர் பாதுகாப்பாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நெருங்கிக்கொண்டிருந்தபோது தொழிலாளர்கள் ஏன் அந்த இடத்தை விட்டு வெளியேறவில்லை என்பதும், […]

உலகம்

ஜப்பானில் இயற்கை சீற்றத்தால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • August 14, 2026
  • 0 Comments

கிழக்கு ஜப்பானில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சிபா மாகாணம் முன்னெப்போதும் இல்லாத மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.  குறித்த மாகாணத்தின் சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் 367 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதற்கு முன்னர், அக்டோபர் 2023 இல்  24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 309 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இந்தக் கனமழையால் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகளும் ரயில் பாதைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் விளைவாக, டோக்கியோவின் நரிட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த […]

ஐரோப்பா

ஜப்பான் உரிமைக் கோரும் சர்ச்சைக்குரிய தீவுக்கு புட்டின் விஜயம்

  • August 13, 2026
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஜப்பான் உரிமை கோரும் தீவான இடுருப்பிற்கு (Iturup) இன்றைய தினம்  களவிஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்தத் தீவுத் தொடருக்கு புதின் நேரில் மேற்கொண்ட முதல் பயணம் இது என அரசு செய்தி நிறுவனமான டாஸ் (TASS) விவரித்தது. இந்தப் பயணத்தின்போது, ​​ரஷ்யாவின் தூரக் கிழக்கில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சிகளை மேற்பார்வையிட்ட பின்னர், அவர் இடுருப்பில் உள்ள யாஸ்னி மீன் பதப்படுத்தும் ஆலையைப் பார்வையிட்டுள்ளார். இதற்கடையே ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் X தளத்தில் […]

உலகம்

ஜப்பானிய யென்னின் மதிப்பு கூடுவதற்கு அமெரிக்கா பங்களிப்பு

  • August 2, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் ஜப்பான் யென்னின் மதிப்பு கூடுவதற்கு அமெரிக்க கணிசமாக பங்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், ஜப்பானுடனான நட்பின் அடையாளமாகவும், உலகப் பொருளாதாரத்திற்கு உதவுவதற்காகவும், யென்னின் மதிப்பு கூடுவதற்கு அமெரிக்கா கைக்கோர்த்ததாக தெரிவித்துள்ளார். “அவர்கள் சிறிதளவு உதவியை விரும்பினார்கள், நாங்கள் எப்போதும் ஜப்பானுக்குத் துணையாக இருப்போம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிச்சயமாக பேர்ல் ஹார்பர் சம்பவத்தைத் தவிர, ஜப்பான் எப்போதும் எங்களுக்கு மிகவும் நல்லதாகவே இருந்துள்ளது எனக் கூறிய ட்ரம்ப் அது […]

உலகம்

ஜப்பானின் பூர்வீக குடிமக்களில் பாரிய வீழ்ச்சி – ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டினர்

  • July 30, 2026
  • 0 Comments

ஜப்பானில் 40 ஆண்டுகளில் முதல் முறையாக பூர்வீக மக்கள் தொகை 120 மில்லியனுக்கும் குறைவாகக் குறைந்துள்ளதுடன் வெளிநாட்டினர் அதிகரித்துள்ளனர். உள்விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி,  நாட்டில் வசிக்கும் ஜப்பானியர்களின்  எண்ணிக்கை  119.74 மில்லியனாக காணப்படுகிறது.  இது தொடர்ச்சியாக 17வது ஆண்டாக ஏற்படும் வருடாந்திர சரிவைக் குறிக்கிறது. பதிவுகள் தொடங்கியதிலிருந்து எண்ணிக்கை மற்றும் சதவீதம் ஆகிய இரண்டிலும் மிகக் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை இது குறிக்கிறது. (இவை ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கான கணிப்பு ஆகும்) […]

உலகம்

ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் – 50 பேர் காயம், இலட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

  • July 28, 2026
  • 0 Comments

ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் காரணமாக சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் சாலைகளும் சேதமடைந்துள்ளன. ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் இன்று காலை 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது. இதனைத் தொடர்ந்து சிறிய சுனாமிக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முன்னதாக சேத விபரங்கள் வெளியாகாத நிலையில் தற்போது அதிகாரிகள் அந்த விபரங்களை வெளியிட்டுள்ளனர். பின்னதிர்வுகளும் பதிவாகியதால் பாதுகாப்பு கருதி 150,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்ற மையங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை […]

உலகம்

ஜப்பானில் கடும் வெப்ப அலையை சமாளிக்க தெருக்களில் கட்டுப்பட்டுள்ள ஃபிரிட்ஜ்

  • July 24, 2026
  • 0 Comments

ஜப்பானில் கோடை காலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலையை எதிர்கொள்ளும் வகையில், ‘மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ்’ எனும் புதுமையான குளிரூட்டும் மையங்கள் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்கள் தெருக்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. வீதிகளில் காணப்படும் குளிர்பான விற்பனை இயந்திரங்களின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தின் உள்ளே வெப்பநிலை எப்போதும் 15°C அளவில் பராமரிக்கப்படுகிறது. ஒருவர் உள்ளே சென்று அமர்ந்தவுடன், தலை, கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் 5°C அளவிலான குளிர்ந்த காற்று வீசி, […]

உலகம்

ஜப்பானில் மாயமாகியிருந்த விசேட தேவையுடைய சிறுவன் சடலமாக மீட்பு

  • July 2, 2026
  • 0 Comments

ஜப்பானின் கொமாட்சு நகரில் உள்ள விசேட தேவையுடைய பாடசாலையொன்றில் இருந்து 10 வயதுடைய சிறுவன் மாயமாகியிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் சுமார் 1.5 கி.மீ தொலைவில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை கழிவறையை பயன்படுத்துவதற்கு அனுமதிகோரி வகுப்பறையை விட்டு வெளியேறிய நிலையில் மாயமாகியுள்ளார். பாடசாலையின் அவசரகால வெளியேற்றத்தின் வழியாக அவர் வெளியேறியிருக்கலாம்  என ஆசிரியர்கள் நம்புகின்றனர். பின்னர், அவரது காலணிகள் அருகிலுள்ள ஒரு நெல் வயலின் ஓரத்தில் இருந்து  […]