உலகம்

ஜப்பானில் கடும் வெப்ப அலையை சமாளிக்க தெருக்களில் கட்டுப்பட்டுள்ள ஃபிரிட்ஜ்

ஜப்பானில் கோடை காலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலையை எதிர்கொள்ளும் வகையில், ‘மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ்’ எனும் புதுமையான குளிரூட்டும் மையங்கள் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மையங்கள் தெருக்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

வீதிகளில் காணப்படும் குளிர்பான விற்பனை இயந்திரங்களின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த இயந்திரத்தின் உள்ளே வெப்பநிலை எப்போதும் 15°C அளவில் பராமரிக்கப்படுகிறது. ஒருவர் உள்ளே சென்று அமர்ந்தவுடன், தலை, கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் 5°C அளவிலான குளிர்ந்த காற்று வீசி, வெறும் 5 நிமிடங்களில் உடலை உடனடியாகக் குளிர்விக்கிறது.

உடல் அளவுக்கு அதிகமாகக் குளிர்வடைவதைத் தடுக்க, 20 நிமிடங்களில் இது தானாகவே இயங்குவதை நிறுத்திக் கொள்ளும் அதிநவீன வசதியும் பொருத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள், தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் வீதிகளில் செல்பவர்கள் வெப்ப பக்கவாதத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள இந்த வசதி உதவியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்