ஜப்பானின் நகரமொன்றில் அனைத்து தொடக்கப் பாடசாலைகளையும் மூட நடவடிக்கை!

ஜப்பானிய நகரமான உட்சுனோமியாவில் (Utsunomiya) உள்ள அனைத்து தொடக்க பாடசாலைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் முதல் முறையாக கரடி ஒன்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஐந்து லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இருப்பினும் இதுவரை அக்கரடி பிடிபடவில்லை.
கடைசியாக அந்த கரடி பாடசாலையொன்றுக்கு அருகில் காணப்பட்டதாக கூறப்பகிறது. இதனைத் தொடர்தே பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் முழுவதும் கரடித் தாக்குதல்கள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வரும் வேளையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.






