ஜப்பானில் வட்டி விகிதம் உயர்வு : 31 ஆண்டுகளில் முதல்முறை!
ஜப்பானில் கடந்த 31 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
ஈரான் போரினால் தூண்டப்பட்ட எரிசக்தி விலை உயர்வின் காரணமாக நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை முன்னெடுது்துள்ளது.
இதற்கமைய ப்பான் வங்கி தனது குறுகிய கால கொள்கை வட்டி விகிதத்தை 0.75%-லிருந்து 1%-ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் ஜப்பான் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைகளால் ஏற்படும் விலை மாற்றங்கள், வணிகங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளில் ஒப்பீட்டளவில் வேகமாக முன்னேறி வருகின்றன.
இது பரந்த அளவிலான நுகர்வோர் பொருட்களின் விலை உயர்வுக்குப் பரவக்கூடும்,” என்று தெரிவித்துள்ளது.
நடுத்தர மற்றும் நீண்ட கால பணவீக்க எதிர்பார்ப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அடிப்படைப் பணவீக்கம் நமது விலை இலக்கை விட அதிகமாக விலகிச் செல்லும் அபாயம் உள்ளது,” என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.




