Breaking News உலகம்

ஹமாஸின் இரு முக்கியஸ்தர்கள் உயிரிழப்பு – இஸ்ரேல் முழக்கம்

  • June 21, 2026
  • 0 Comments

ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் இராணுவப் பிரிவுகளில் செயல்பட்ட இரு முக்கியஸ்தர்களை அழித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை இன்று சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள நிலையில் இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பிற்கு அமைய  ஹுசைன் காத்ரா (Hussein Qadra) மற்றும் முகமது ஃபர்ரா (Mohammed ​Farra) ஆகியோரைத் தாங்கள் “ஒழித்துவிட்டதாக” இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் X பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ஃபர்ராவுடன் இணைந்து இந்த வலையமைப்பை வழிநடத்திய காத்ரா, […]

உலகம் செய்தி

அமெரிக்காவுடனான உறவில் விரிசல் : தற்சார்ப்பு நிலையை வலியுறுத்தும் இஸ்ரேல்

  • June 20, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான இஸ்ரேலின் உறவு, பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தற்சார்பை வலுவாக வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில்  400 கி.மீ. தூரம் வரை செல்லக்கூடியதும், 10 மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் பாயக்கூடியதுமான லோரா பாலிஸ்டிக் ஏவுகணையை இஸ்ரேல் சோதனை செய்துள்ளது. இநத் ஆயுதத்தை இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாித்துள்ளது. லெபனான் மற்றும் ஈரான் விவகாரங்களில் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களின் பின் இந்த […]

உலகம்

தெஹ்ரானில் விமான சேவைகள் இடைநிறுத்தம்!

  • June 8, 2026
  • 0 Comments

தெஹ்ரானில் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தெஹ்ரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திற்கான அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையம் நீண்ட காலமாக மூடப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம்  திறக்கப்பட்டிருந்த நிலையில் மீளவும் மூடப்பட்டுள்ளது.

உலகம்

இஸ்ரேலின் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு – ஆபத்தான நிலையில் இருவர்!

  • June 7, 2026
  • 0 Comments

இஸ்ரேலில் இன்றைய தினம் பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 05 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 35 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்ததாக இஸ்ரேலின் அவசர சேவையான மாகன் டேவிட் அடோம் ( Magen David Adom) தெரிவித்துள்ளது. மேலும் இருவர் ஆபத்தான உடற்காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருவதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். இதேவேளை தாக்குதலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்,  மற்றொரு நபரை தேடும் […]

உலகம்

போரில் திருப்புமுனை : முக்கிய கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்!! ஹிஸ்புல்லாவிற்கு ஏமாற்றம்!

  • June 1, 2026
  • 0 Comments

லெபனானில் அமைந்துள்ள 900 ஆண்டுகள் பழமையான பியூபோர்ட் (Beaufort) கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றி உள்ளது. தரைவழி தாக்குதல் மூலம் பியூபோர்ட் கோட்டையையும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட பியூபோர்ட் கோட்டையின் மீது இஸ்ரேல் இராணுவத்தினர் தங்களது நாட்டு தேசியக்கொடியை ஏற்றியுள்ளனர். பியூபோர்ட் கோட்டையை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியிருப்பது, ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் ஒரு வியத்தகு திருப்புமுனை என்று பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு  தெரிவித்துள்ளார். இப்பகுதியில் இஸ்ரேல் […]

உலகம்

அன்டோனியோ குட்டெரஸுடனான அனைத்துத் தொடர்புகளையும்  துண்டித்த இஸ்ரேல்!

  • May 29, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தடுப்பு மையங்களில் இருந்த பாலஸ்தீன கைதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. பாலியல் குற்றச்சாடடுகள் காரணமாக  கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரஸுடனான அனைத்துத் தொடர்புகளையும்  துண்டித்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தூதர்  டேனி டானன் (Danny Danon ) இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். ஷ இஸ்ரேலைக் கறுப்புப் […]

உலகம்

போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாவதைத் தடுக்க இஸ்ரேல் என்ன வேண்டுமென்றாலும் செய்யும்!

  • May 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான எந்தவொரு ஒப்பந்தத்தையும் நம்ப முடியாது என்றும், ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாவதைத் தடுக்க இஸ்ரேல் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார். அத்துடன் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படாது,  என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். போரை நிறைவுக்கு கொண்டுவரும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் எந்த இணக்கப்பாடும் எட்டவில்லை.  இதற்கிடையே ஹோர்மூஸ் […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் 100 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிப்பு – இஸ்ரேல் ராணுவம் தகவல்

  • May 3, 2026
  • 0 Comments

தெற்கு லெபனான் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஆயுதங்கள் ஹிஸ்புல்லாஅமைப்பால் பயன்படுத்தப்பட்டவை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களில் கலாஷ்னிகோவ் வகை துப்பாக்கிகள், சுமார் 20 ரொக்கெட்டுகள், குறி பார்த்து சுடும் துப்பாக்கிகள்  மற்றும் பிற போர் உபகரணங்கள் அடங்கும். இந்த ஆயுதங்கள் தெற்கு லெபனானின் Rshaf பகுதியில் உள்ள 401 ஆவது படைப்பிரிவின் வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படைப்பிரிவு […]

உலகம்

ஈரானின் நாணய பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி!

  • April 30, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான நிலையற்ற போர் காரணமாக ஈரானின் நாணயம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தேசிய நாணயமான ரியால், டொலருக்கு 1.8 மில்லியன் என்ற சாதனை அளவிலான வீழ்ச்சியைச் பதிவுசெய்துள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய போரின் ஆரம்ப வாரங்களில், நாட்டிற்குள் வர்த்தகமோ அல்லது இறக்குமதிகளோ குறைவாக இருந்ததால், ரியால் நாணயம் நிலையாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு ரியால் சரியத் தொடங்கி, நேற்று  சாதனை அளவிலான வீழ்ச்சியை எட்டியது. ரியாலின் வீழ்ச்சி பணவீக்கத்தை மேலும் தூண்டக்கூடும் […]

உலகம்

இயேசு கிறிஸ்து சிலை சிதைப்பு: விசாரணைகள் ஆரம்பம்

  • April 20, 2026
  • 0 Comments

லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே,  இஸ்ரேலிய வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையினைச் சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து பல்வேறு விவாதங்கள் எழும்பி வருகின்றது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய இப் படம்  சமீபத்தில் எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.