உலகம் செய்தி

தெற்கு லெபனானில் 100 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிப்பு – இஸ்ரேல் ராணுவம் தகவல்

  • May 3, 2026
  • 0 Comments

தெற்கு லெபனான் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஆயுதங்கள் ஹிஸ்புல்லாஅமைப்பால் பயன்படுத்தப்பட்டவை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களில் கலாஷ்னிகோவ் வகை துப்பாக்கிகள், சுமார் 20 ரொக்கெட்டுகள், குறி பார்த்து சுடும் துப்பாக்கிகள்  மற்றும் பிற போர் உபகரணங்கள் அடங்கும். இந்த ஆயுதங்கள் தெற்கு லெபனானின் Rshaf பகுதியில் உள்ள 401 ஆவது படைப்பிரிவின் வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படைப்பிரிவு […]

உலகம்

ஈரானின் நாணய பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி!

  • April 30, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான நிலையற்ற போர் காரணமாக ஈரானின் நாணயம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தேசிய நாணயமான ரியால், டொலருக்கு 1.8 மில்லியன் என்ற சாதனை அளவிலான வீழ்ச்சியைச் பதிவுசெய்துள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய போரின் ஆரம்ப வாரங்களில், நாட்டிற்குள் வர்த்தகமோ அல்லது இறக்குமதிகளோ குறைவாக இருந்ததால், ரியால் நாணயம் நிலையாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு ரியால் சரியத் தொடங்கி, நேற்று  சாதனை அளவிலான வீழ்ச்சியை எட்டியது. ரியாலின் வீழ்ச்சி பணவீக்கத்தை மேலும் தூண்டக்கூடும் […]

உலகம்

இயேசு கிறிஸ்து சிலை சிதைப்பு: விசாரணைகள் ஆரம்பம்

  • April 20, 2026
  • 0 Comments

லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே,  இஸ்ரேலிய வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையினைச் சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து பல்வேறு விவாதங்கள் எழும்பி வருகின்றது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய இப் படம்  சமீபத்தில் எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலகம்

250 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை!

  • April 9, 2026
  • 0 Comments

இஸ்ரேல் நேற்று (08) லெபனான் மீது நடத்திய மிகக்கடுமையான தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவுடன் நிரந்தர அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது “நியாயமற்றது” என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகம்

“இஸ்ரேலிய – அமெரிக்க பல்கலைக்கழகங்களை தாக்குவோம்”

  • March 29, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, பிராந்தியத்திலுள்ள அத்தகைய அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சட்டபூர்வமான இலக்குகளாகக் கருதப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர். மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் அனைத்துப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அந்த இடங்களை […]

உலகம் செய்தி

இஸ்ரேல் விடுத்த அவசர உத்தரவு

  • March 22, 2026
  • 0 Comments

தெற்கு இஸ்ரேலின் ஆராட் (Arad) மற்றும் டிமோனா (Dimona) பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி இஸ்ரேல் முழுவதும் இன்று மற்றும் நாளை நேரடி வகுப்புகளை இரத்து செய்வதாக அந்த நாட்டு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆராட் மற்றும் டிமோனா பகுதிகளில் நடத்தப்பட்ட 2 ஏவுகணைத் தாக்குதல்களில் சுமார் 100 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் நேரடியாக சமூகமளித்து […]

இலங்கை

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • March 18, 2026
  • 0 Comments

விடுமுறை மற்றும் இதர காரணங்களுக்காக இஸ்ரேலிலிருந்து வெளியேறியுள்ள பணியாளர்களின் விசா காலம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். அதன்படி, பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியான அல்லது காலாவதியாகவுள்ள மீள்- நுழைவு விசாக்கள் ஏப்ரல் 30 வரை நீடிக்கப்படவுள்ளது. இதேவேளை, இதற்காகத் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

உலகம்

டுபாய் சொகுசு விருந்தகம் மீது தாக்குதல்

  • March 1, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் பாரிய இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, டுபாயின் புகழ்பெற்ற ‘பாம் ஜுமேரா’ (Palm Jumeirah) பகுதியில் உள்ள ‘ஃபேர்மாண்ட் தி பாம்’ (Fairmont The Palm) ஐந்து நட்சத்திர விருந்தகம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்கியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது நால்வர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, பஹ்ரைன் மனாமா நகரில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவு (Fifth Fleet) தலைமையகத்திற்கு […]

இலங்கை உலகம்

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல்

  • February 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியமையினால் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானங்கள் சவூதி அரேபிய வான்வெளி வழியாக திருப்பி விடப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து […]

உலகம்

சொந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள ஹமாஸ் – அமெரிக்காவின் அறிக்கையால் பரபரப்பு!

  • October 19, 2025
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ளது. இந்நிலையில் காசாவில் (Gaza) வாழும் பாலஸ்தீன மக்கள் மீது உடனடி தாக்குதல்களை நடத்த ஹமாஸ் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று அமெரிக்கா வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாலஸ்தீனியர்களுக்கு (Palestinians) எதிரான திட்டமிடப்பட்ட தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடுமையாக மீறும் செயல் என்றும், மத்தியஸ்த முயற்சிகள் மூலம் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

error: Content is protected !!